tamilnadu

img

பெண்கள், குழந்தைகள் மீது 2 ஆண்டுகளில் 10.5 லட்சம் வன்குற்றங்கள்

ஒன்றிய அமைச்சர்களின் பதில்களின் மூலம் அம்பலப்படுத்தினார் சு.வெங்கடேசன் எம்.பி.,

புதுதில்லி,பிப்.10-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நடந்து கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தேசத்தின் இரண்டு முக்கிய மான பிரச்சனைகள் குறித்த கேள்விகளை ஒன்றிய அமைச்சர்கள் இருவரிடம் கேட்டி ருந்தேன். ஒருவர் மகளிர் மற்றும் குழந்தை கள் நல அமைச்சர் ஸ்மிருதி ராணி . மற்றொரு வர் கம்பெனிகள் விவகார இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங். கேள்விகளின் மைய அச்சு இந்திய பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பையும், அதற்காக அரசு செயல்படுத்துவதாக கூறும் செயல்களையும் பற்றியது. அதனடிப்படையில் அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் (எண் 568/04.02.2022) பேரிடர் காலத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக வரும் செய்திகளை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதா? அக்காலத்தில் மட்டும் எவ்வ ளவு குற்றங்கள் நிகழ்ந்துள்ளன? பாதிக்கப் பட்டோருக்கான நிர்பயா நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டது? சம்பந்தப்பட்ட அமைச்ச கங்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது? எவ்வளவு பயன்படுத்தப்பட்டது? ஆகிய  கேள்விகளை எழுப்பியிருந்தேன்.

2 ஆண்டுகளில் 10.5லட்சம் வன்குற்றங்கள்

கொள்ள வைத்தது. தேசிய குற்ற ஆணைய பதிவேட்டின் அடிப்படையில் அமைச்சர் பதில் கூறியிருந்தார். அதன்படி பெண்களுக்கு எதிராக  2019 ஆண்டு 4,05,326 குற்றங்கள், 2020  ஆண்டு 3,71,503 குற்றங்கள் என இரண்டாண்டு களில் மட்டும் 7,76,829 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குழந்தைகளுக்கு  எதிராக 2019 - 1,48,090 , 2020 - 1,28,531 குற்றங்கள் என 2  ஆண்டுகளில் மட்டும் 2,76,621 குற்றங்கள்  நிகழ்ந்துள்ளன. மேலும் 2021 ஆம் ஆண்டிற் கான விவரங்கள் இன்னும் தொகுக்கப் படவில்லை எனவும் கூறுகிறார்கள். அரசு கூறும் விதியின்படி ரூ. 25 கோடிக்கு மேல் மூலதனம் கொண்ட நிறுவனங்களில் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்களை உரு வாக்க வேண்டும். அதன்படி கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சரிடம் பணித்தலங் களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளை தடுத்திட (நட்சத்திர குறி இடப்படாத கேள்வி எண் 752/ 07.02.2022) இந்தியாவில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் எவ்வளவு? அவற்றில் எத்தனை நிறுவனங்கள் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்களை உருவாக்கவில்லை? மீறல்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? ஆகிய  கேள்விகளை எழுப்பியிருந்தேன். அதற்கு அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை உரு வாக்குபவையாக இருக்கின்றன. நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் 21,51,349. அதில் 13,44,857 நிறுவனங்கள் தொடர்ச்சியான செயல்பாட்டில் இருக்கின்றன என்கிறார். பாலியல் வன்முறை தடுப்புக் குழு  உருவாக்கப்படவில்லை என்றும் அரசின் கவனத்திற்கு வந்த நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2019 - 3, 2020 - 1, 2021 - 0 என்றும் கூறியுள்ளார் . மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமே 4 நிறுவனங்கள் தான். மேற்கண்ட இரண்டு அமைச்சர்களும் நான் கேட்ட கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பி னையே கேள்விக்கு உள்ளாக்குபவையாக இருக்கின்றன. இரண்டு கேள்விகளுக்கும் இருக்கிற தொடர்பு, அமைச்சர்களின் பதிலில்  உருத்தெரியாமல் விலகி நிற்கிறது.

13 லட்சம் கம்பெனிகளில்...

கடந்த இரண்டாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பெண்கள் & குழந்தைகள் மீதான வன்முறைக் குற்றங்கள் மட்டும் சுமார் 10.5 லட்சம் . ஆனால் பாலியல் வன்முறை தடுப்புக்குழுக்கள் உருவாக்கப்படாமல் அரசின் கவனத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளையும் சேர்த்து வெறும் 4 என்றால், எது உண்மை ? பதிவு செய்யப்பட்ட 13 லட்சம் நிறுவனங் களிலும் பாலியல் வன்முறை தடுப்புக்குழு இருக்கிறதா ? முறைப்படுத்தப்பட்டுள்ளதா? அதன் செயலாற்றுதல் என்ன ? என்பதை ஒரு  பொறுப்பான அரசு ஆய்வு செய்ய வேண்டாமா?  2 ஆண்டுகளில் 7. 5 லட்சம் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்ந்துள்ள ஒரு நாட்டில் 13 லட்சம் கம்பெனிகளில் 4 கம்பெனிகள் தான் பாலியல் வன்முறை தடுப்புக்குழுக்கள் அமைக்கப்படாததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவை என்பதை எந்தக் கோணத்தில் இருந்து பார்த்து நம்புவது?

‘நிர்பயா நிதி’யின் கதி என்ன?

அதையும் தாண்டிய பெரும் கொடுமை வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அதன் பிறகான அடிப்படை வாழ்க்கை நிர்மாணங்களுக்கு தரப்படுகின்ற நிர்பயா நிதியின் பயன்பாடு. 2015 ஆம் ஆண்டு இந்த திட்டம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து அரசு, பெண்களுக்கு அடிப்படை வாழ்க்கை நிர்மாணங்களுக்காக தரப்படு வதற்கு இதுவரை பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை ரூ.6612 கோடி. அதில் துறைவாரியாக பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை ரூ. 4241 கோடி. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரப்பட்டிருப்பதோ ரூ.2989 கோடி. தேசம் அடைய வேண்டிய சமுதாய மேம்பாட்டின்படி இந்தத் தகவல்கள் மிகவும் மோசமானவை. கவலை கொள்ளச் செய்பவை. தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டதில் மூன்றில் 2 மடங்கு தொகை தான் துறை களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதில் பாதித் தொகை தான் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனில் இது  எந்த வகையில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்வையும், நம்பிக்கையை யும் காக்கும்?