tamilnadu

img

ஒற்றுமை ஒன்றே பலம்

பாலஸ்தீன விடுதலைக் ்கான பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் நிறுவன ரும் பொதுச் செயலாளரு மான ஜார்ஜ் ஹபாஸ் அவர்களின் பிறந்த தினம். இன்று (02/08/2023). அல் ஹக்கீம் என்று அழைக்கப்பட்ட தோழர் ஜார்ஜ் ஹபாஸ் ,இஸ்ரேல் மற்றும் அமெரிக்க  ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளில் இருந்து  அரபு நாடுகளை விடுவிப்பதற்காக அரபு நாடுகளின் ஒற்று மையை வலியுறுத்தியவர். மருத்துவரான தோழர் ஹபாஸிடம் உங்களை மார்க்சியத்தின் பக்கம் ஈர்த்தது எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘என் மன உறுதியை உடைத்து விடலாம் என்று 10 மாதங்களாக சிறையில் அடைத்தனர். ஆனால் நான் சிறையிலிருந்த நாட்கள் முழுவதும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாசேதுங், ஹோ சி மின், ஆகியோரைப் படித்தேன்; அது என்னை மேலும் உறுதியாக்கியது” என்று கூறியவர். அரபு நாடுகளின் எண்ணெய் வளங்களை கொள்ளை யடிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த சூழ்ச்சியில் அரபு நாடுகள் வீழ்வதையும் சுரண்டப்படுவதையும் தடுக்க, அந்நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார்.மேலும் அரபு நாடுகளின் ஒன்றியத்தை உரு வாக்குவதும் மதச்சார்பற்ற - மார்க்சிய அடைப்ப டையிலான சோசலிச பாலஸ்தீனத்தை உருவாக்கவும் மார்க்சிய-லெனினிய வழியில் போராடி வந்தவர் தோழர் ஜார்ஜ் ஹபாஸ். அவர் இறப்பதற்கு முதல் தினம் அவரை சந்தித்த உதவியாளர், அல் தகீரிடம் நாட்டு மக்களுக்கான ஒரு செய்தியை அறிவித்திருந்தார். அது:  ‘ஒற்றுமை! ஒற்றுமை! ஒற்றுமை!’