tamilnadu

புதிய வகுப்பறை கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

புதிய வகுப்பறை கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

ங்கம்பாடி அருகே, பெருமாள்பேட்டை மீனவர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், புதிய வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகதாஸ் தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு, நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.94.24 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளம் கொண்ட நான்கு வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பெருமாள்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், ஒப்பந்ததாரர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.