tamilnadu

புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி,டிச.5 புதுச்சேரி மாநிலம் மங்கலம் தொகுதி சாத்தமங்கலம் பகுதியில மழையால் பாதிக்கப்பட்ட மக் களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நேரில் சந் தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: இந்தாண்டு பருவ மழையால் பொதுமக்கள் வீடுகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். விவசாய நிலங்கள் பாதிக்கப்பட் டுள்ளன. இவற்றை போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்யும் பொறுப்பு முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு உண்டு. ஆனால் அவர்கள் சில இடங்களுக்கு மட்டும் சென்று பார்த்துவிட்டு மத்திய குழுவை அழைத்தார்கள். அக்குழு 2 மணி நேரம் மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு மழை கடுமையாக பெய்து பொதுமக்கள் பாத்திக்கப்பட்டுள்ளனர்.  

உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். இதுசம்பந்தமாக முதல்வர் இதுவரை எதுவும் பேசவில்லை. மத்தியில் இருந்து நிதி வரும் என்று சொன்னார்கள் இதுவரை எதுவும் வரவில்லை. மத்திய அரசு புதுச்சேரியை புறக்கணிக்கிறது. அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.5,000 வழங்குவோம் என்று சொன்னார்கள். இதுவரை வழங்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது. சட்டப்பேரவையில் முதல்வர் 16 அறிவிப்புகளை சொன்னார். ஆனால் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை. மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொடுத்த நிதியைவிட ரூ.24 கோடி தான் அதிகமாக கொடுத்துள்ளது. முதல்வர் சொன்னஒரு வாக்குறுதிகளை கூட நிறை வேற்றவில்லை.  இதனை எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தான் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால் அது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும்போது எதிர்க்கட்சிக்கு பதில் கூறினோம். இவ்வாறு அவர் கூறினார்.