tamilnadu

img

காட்டுத்தீ தடுப்பு பணிக்கு குழுக்கள் அமைப்பு: அமைச்சர் தகவல்

சென்னை,ஏப்.18- காட்டுத்தீ பரவு வதை கண்காணித்து தடுப் பதற்கு 5 குழுக்கள் அமைக் கப்பட்டிருப்பதாக அமைச் சர் மதிவேந்தன் தெரிவித் தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் செவ்வாயன்று (ஏப்.18) கேள்வி நேரத்திற்கு  பிறகு பேசிய எதிர்க் கட்சி  கொறடா எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் மலைப் பகுதியில் கடந்த ஒரு வார மாக பற்றி எரியும் காட்டுத்தீ குறித்து பேசினார். இதற்கு பதிலளித்து  பேசிய வனத்துறை அமைச் சர் மதிவேந்தன்,“கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலந்துறையை அடுத்த நாதேகவுண்டன்புதூர் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் காய்ந்த மூங்கில், புற்கள்  அதிகமான உள்ளதால் காட்டுத் தீ பரவியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர், தீய ணைப்பு வீரர்கள் தீயை  அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின்  தாக்கம் அதிகமாக இருந் தது.

இதனால் அவர்களால் உடனடியாக தீயை தடுக்க  முடியவில்லை. இவர்க ளுக்கு உதவியாக ஆனை மலை, நீலகிரி, சிறுமுகை வனச்சரகங்களில் இருந்து வனப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். மொத்தம் 150 க்கும் மேற் பட்ட வனத்துறையினர் 10  குழுக்களாக பிரிந்து காட்டுத் தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். ஆனால் தீ  மட்டும் கட்டுக்குள் வரவில்லை.  இந்நிலையில் தான்  கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தொடங்கியது. இதனால் பெரும்பகுதி கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. மேலும், 5 கோட்டங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள், பழங்கு மக்கள் என 210 பேர் தீ  அணைப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர். சுமார் 200 ஹெக்டர் பரப்பளவு பாதிக் கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த மரங்கள், மூலிகை  செடிகளுக்கும், வன விலங்குகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்றார். கோடைக்காலம் வந்தாலே வனப்பகுதிகளில் காட்டுத்தீ பிரச்சனை உரு வாகி விடும். இதனால் பல இடங்களில் வனத்துறையி னர் தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் கூட ஆங் காங்கே திடீரென காடுகள் தீப்பிடித்து எரியும் சம்பவங் கள் நடந்து விடுகின்றன. எனவே, மாநிலம் முழு வதும் காட்டுத்தீ தடுப்பு பணிக்கான 5 குழுக்கள் அமைத்து பணியில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்