தஞ்சாவூர், ஜன.1 - “கல்வி மூலம் சுதந்திரம் அடையலாம்” என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுவ தற்காக, சென்னையிலிருந்து வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆட்டோக்கள் மூலம், தங்களது சுற்றுலாப் பயணத்தை டிச.28 அன்று தொடங்கினர். இதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 5 பெண்கள் உள்பட 21 பேர் 9 ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். ஆட்டோக்களில் ஏறத்தாழ 1,500 கி.மீ. பயணம் செய்து நம் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம், பழக்க வழக்கங் களையும் அறிந்து வருகின்றனர். சென்னையில் புறப்பட்ட இப்பயணி கள் புதுச்சேரி, கடலூர், சீர்காழி, வைத்தீஸ் வரன் கோயில் ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு, தஞ்சாவூருக்கு திங்க ளன்று இரவு வந்தனர். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பெரிய கோயி லுக்குச் சென்று சுற்றி பார்த்துவிட்டு, புதுக்கோட்டைக்கு புறப்பட்டனர். இவர்கள் மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வழி யாக திருவனந்தபுரத்தில் ஜன.6 அன்று இப்பயணத்தை நிறைவு செய்கின்றனர்.