tamilnadu

img

உடல்தானம் செய்தவர்களுக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., நேரில் வாழ்த்து

உடல்தானம் செய்தவர்களுக்கு  ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., நேரில் வாழ்த்து

திண்டுக்கல்லில் உடல் தானம் செய்த வர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். வெள்ளிக்கிழமை அன்று திண்டுக் கல் பி.வி.கே.மகாலில் நீதியரசர் ரத்தின வேல் பாண்டியன் நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் காவல்துறை உயர் அலுவலர் பாலசுப்பிர மணியம், செரு நிறுவனத்தின் தலை வர் வெள்ளைச்சாமி ஆகியோர்  தங்களது உடல்களை தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎம் திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந் தம் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உடல் தானம் செய்த பாலசுப்பிரமணியம், வெள்ளைச்சாமி ஆகிய இருவரையும் சால்வை அணிவித்து வாழ்த்தி, பாராட்டு உரையாற்றினார்.  இந்நிகழ்வின் போது பெரீஸ் பிஸ்கட் உரிமையாளர் மகேந்திரவேல், அணில் சேமியா உரிமையாளர் சுகுமாறன், அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபா லன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார்,  மாவட்டக்குழு உறுப்பினர் கே.எஸ்.கணேசன், திராவிடர் கழகத்தின் சார்பாக வீரபாண்டி மற்றும் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் கல்லூரி முதல்வர் சுகந்திராஜ குமாரி யிடம் பாலசுப்பிரமணி, வெள்ளைச்சாமி ஆகியோர் உடல்தான உறுதிமொழி பத்தி ரத்தை வழங்கினர் என்பது குறிப்பி டத்தக்கது. (ந.நி)