மதுரை:
மதுரை மாநகர் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்மீனாட்சி அம்மன் கோவில் மற்றும்நான்கு மாசி வீதிகளில் பல்வேறுபணிகள் நடைபெற்று வருகின் றன. இதற்காக சாலையில் பலஇடங்களில் பள்ளங்கள் தோண் டப்பட்டுள்ளது. மதுரையில் வெள்ளியன்று சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. ஸ்மார்ட் சிட்டிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. டவுன்ஹால் ரோடு பகுதியில் வெள்ளியன்று இரண்டு பெண்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக ஸ்மார்ட்சிட்டி திட்டத்துக்கு தோண்டப் பட்ட பள்ளத்தில் ஒருவர் தவறி விழுந்து விட்டார். அந்தக் காட்சிஅருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தவறிவிழுந்த பெண்ணை அக்கம்பக் கத்தினர் மீட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.