tamilnadu

img

பரிசோதனை - வம்பன்செபா

அந்த மனுசனுக்கு கொஞ்சநாளா வாந்தி மயக்கம் தலைவலின்னு சோர்ந்து போயிட்டாரு. கல்யாணம் காதுகுத்துன்னு எல்லா ருக்கும் ஒரே முகூர்த்தத்துல மண்டபம்  கெடைக்காதனாலயும் நம்மாளுங்களுக்கு காத்திருக்க பொறுமை இல்லேங்கிறதனால யும் ஆத்தாடீ மண்டபம் கெடைச்சாப்போதும் ஏதோ ஒருநாளுன்னு எல்லா நாள்கள்ளை யும் வீட்டுத் தேவைகளை மாதம் முழுக்க. வச்சுருறாங்க சொந்தபந்த ஒன்னுரெண்டு தேவை போக நட்புக்காக பல பத்திரிகைகளுக்குப் போகவேண்டியிருக்கு. இப்பவெல்லாம் அங்க சாப்பிடுற சாப்பாடு ஒத்துக்கிறதில்ல.  அப்படியொன்னும் வயசாயிடல அவ ருக்கு. நாற்பதுக்கு மேலேன்னு வச்சுக்கங்க ளேன். மனுசன் நல்லா திடகாத்திரமான ஆளு தான், ஆனாலும் முன்னமாதிரி மண்டபச் சாப்பாடு ஒத்துக்கிறதில்லன்னு பல நண்பர்களிடம் சொல்லிப் புலம்புவாரு. உணவுல கலப்படமா இல்ல நம்ம உடம்புக்கு ஏத்துக்கலையான்னு பீல் பண்ண  ஆரம்பிச்சவரு ஒருவேல பலபேரு சொல்ற தப்போல சுகர் பிரஷர்ன்னு ஏதாச்சும் இருக்கு மோன்னு அவருக்குத் தோனிருக்கு. வைரஸ் காய்ச்சலுக்குக்கூட ஆஸ்பத்திரி  பக்கம் போகாத மனுசன். புதுசும் தினுசுமா வயசு வித்தியாசமின்றி எல்லோருக்கும் வர்ற  நோவுகளுக்கு இதுதான்னு அறிஞ்சவருக்கு நமக்கும் ஏதாச்சும் தொத்திருக்குமோன்னு டவுட் வந்துருச்சு எதுக்கும் ஒரு டெஸ்ட் எடுத்துருவோம்னு ஒருவாரத்திற்கு முன்னமே முடிவு செஞ்ச வருக்கு அன்னைக்குத்தான் நேரம் கெடைச்சி ருக்கு. அன்னந்தண்ணி பல்லுல படாமப்  போங்கன்னு யாரோ சொல்ல, காலை யிலேயே பெரியாஸ்பத்திரி போயி ஓபி சீட்டு  வாங்கிக்கிட்டு அந்த அறையில ரத்தம் கொடுத்ததும், மறுபடியும் ஒரு டெஸ்ட் எடுக்க ணும் சாப்பிட்டு வாங்கன்னு நர்ஸ் சொன்ன தும், இப்ப இதுக்கென்ன ரிசல்ட்னு தெரி ஞ்சுக்க நெனச்சு எத்தனிச்சவருக்கு அதற்கு முன்னே எரிஞ்செரிஞ்சு விழுந்த சகோதரி யிடம் வாயக்கொடுக்காம வந்துட்டாரு. இதுல  வொன்னும் இல்லேன்னு மனசார சொன்னாத்தான் என்னவாம். பயத்துல ஆர்வமிகுதியில அவசரப்பட்டவருக்கு ரத்தத்தை டெஸ்ட் பண்ணித்தான் சொல்லு வாங்க அதுக்கும் கொஞ்சம் நேரமாகுங்கி றது தெரியாத ஆளில்ல. ஆனாலும் மனசு தொரத்துது.

நம்ம அவசரத்திற்கு அவங்க என்னதான்  பண்ணுவாங்க. பாவம் ஒருநாளைக்கு இப்புடி  எத்தனை டெஸ்ட்டோ இந்தாத்தான் வரி சையா உட்காந்திருக்காங்கலே. நல்லவேல, நாம முன்னாடி வந்தது நல்லதாப்போச்சுன்னு மனுசுக்குள்ள முணகியவரு, சரி நாம தான் பொறுத்திருப்போம்னு வெரசாப்போயி  வயித்த நெறச்சுக்கிட்டு அடுத்த டெஸ்ட்டுக்குப் போயி கணக்கா உட்காந்தாரு. அந்த செவிலியர் கொஞ்சம் பஞ்சோட சிரஞ்ச எடுக்க இந்தாளு நமக்கு ஏது மில்லேன்னு அவங்ககிட்ட புரூப் பண்ற தப்போல கைய முறுக்கி நரம்புகள புடைக்க வச்சதும், இதுதான் சாக்குன்னு நறுக்குன்னு  குத்தி உறிஞ்சுனதும் அவங்கவேல முடிஞ்ச மாதிரி பொசுக்குன்னு திரிம்பிக்கிட்டவுங்க. அப்படியே வெளியில உட்காருங்க. ரிசல்ட் வரும்னு சொல்ல வெளியே போயி  நீளமாக்கெடந்த பெஞ்சுல உட்கார்ந்து பிள்ளத்தாச்சியாட்டம் பினாத்திக்கிட்டு இருந்தவருக்கு வேர்த்து விறுவிறுத்தி ருந்துச்சு. அப்படியே மெதுவா எட்டிப்பாத்த வரு ரத்தக்குடுவைகளோடு ஐக்கியமாயி ருக்கும் அந்தப் பரிசோதகர் மொகத்துல  மலர்ச்சி தெரிஞ்சாலே, நமக்கு ஒன்னு மில்லேன்னு நாம முடிவுசெஞ்சுக்கலாம்னு பாத்தாரு. அதுக்கு வாய்ப்பில்லாமலிருந்தது. இதற்கிடையில நேரமாக வீட்டிலிருந்து மனைவி போன், 

என்னாச்சுங்க?

நீங்க புலம்புனமாதிரி ஒன்னுமில்லை யேன்னு கேட்க, சத்த இரு. பிளட் இப்பத்தான் சோதனை யிலிருக்கு. நீவேற சோதிக்காதேன்னு சொல்லி போனை கட்பண்ணியதும் உணர்ச்சி வசத்தாலே பொண்டாட்டி மேல பாசம்  பொத்துக்கிட்டு வந்துருச்சு. தனக்கொன்னுனா மொதல பாதிக்கப்படுறது அவங்கவங்க பார்ட்னர்கள்தானே. இதற்கி டையில நீரழிவை சாக்கா வச்சு பல நோய்களால் பாதிக்கப்பட்ட அத்தன உறவு களும் கண்முன்னே வந்து போனாங்க. நாலுகேசு உள்ளேயும் நாளுகேசு வெளி யேயும் அலைக்கழிக்கப்படும். சிலபல  மனிதர்களாட்டம் ஆம்புலன்சுகளும், இழுத்துவிடும் மூச்சப்போல வெண்டிலேட்டர் சப்தமும் அந்த ஆஸ்பத்திரிய ரவுண்டு கட்ட தொடங்கியவருக்கு. அவசரப்பிரிவுப் பக்கமாப்போக பீதீயாகிடுச்சு. மாத்திரமருந்து வாடைக்கிடையில செல்போனில்லாம மனுசமக்க மொகத்த நேராப்பாத்து பேசுற யோக்கிதையே பலபேருக்கு அப்பத்தான் கெடைக்கும்போல.

அப்படியே பிரசவார்டுகள்ள பொறந்த குழந்தைகளோடு துணிசுத்தி அயர்ந்து கிடக்கும் அந்த பிஞ்சுத்தாய்களாகட்டும் அறுவ சிகிச்சை செஞ்சு குருதிவடிய பாவாடை யோடு கிடத்த பெண்கள்படும் ரணங்க ளைப்பார்த்தாலே எத்தனை காம இச்சைக்கா ரனுக்கும் சக மனுஷியா அவங்க மேல மதிப்பும் மரியாதையும் தானா வரும். ச்சே இதுக்குத்தானா இத்தனை ஆட்டம்னு வெளியில திரியிற மனுசப்பயலு களப்பாத்தாலே உலகம் தெரியாத முட்டாப்பயலுகலேன்னு கேட்கத்தோணும். நம்ம கை காலோட அருமை கண்களோட அருமைன்னு வீல்சேர்ல கட்டோட உட்கார்ந்து போறவங்களப்பாத்ததும் தடவித்தடவிப்பார்க்க ஒவ்வொரு மனுசனும்  கோவிலுக்குப்போறதவிட வருசத்து ஒருதடவையாவது ஆஸ்பத்திரி ப் பக்கம் வந்துட்டுப் போகணும். அப்பத்தான் நம்மை விட பலபேரு எத்தனை வலிவேதனைகளோட இருக்கிறாங்கன்னு நமக்குத்தெரியவரும். கூலிவேலைக்குப்போற மனுசனுக்கு ரெண்டு பெண்டுங்க. படிக்கவச்சு ஆளாக்க னும்னு நீளமா கடமைகள் இருக்கே. என்  செய்யப் போறோம்னு நெனச்சவரு, சம்பா திச்சுக்குவோம்கிற நம்பிக்கையிலதான் இத்தனை நாளா நாட்கள் நகர்ந்திருந்தது. அப்படியே உட்கார்ந்தபடி இன்னொருமுறை எட்டிப்பார்த்தவரு இந்த டெஸ்ட்டுல நோவுன்னு வந்துட்டா மாத்திர மருந்து உணவுக்கட்டுப்பாடுன்னு வந்துருமே. நாம உழைக்கிற காசு குடும்பத்துக்கே போதல. இதுல மாத்திர மருந்துன்னுவேற. எப்புடி காலத்த ஓட்றது. உஷ்ன்னு விட்ட நீண்ட பெருமூச்சோடு தன்னை ஆசுவாசப்படுத்திக்கிட்டவரு, நம்ம ளோட கனவு லட்சியங்களை அப்படியே மூட்டை கட்டீப்போட்டுட்டு நம்மையே நம்பி யிருக்கிற நம்ம குடும்பத்துக்கான வரு மானத்த கொஞ்சமாவது ஈட்டி கரை சேர்ப்போம்னு முடிவு பண்ணிட்டு இருந்த வர சார் உள்ளே வாங்க செவிலியர் அழைக்க நீளமா ஒரு ரசீதக்கொடுத்து டாக்ட ரப்பாருங்கன்னு சொல்லி பொசுக்குன்னு திரும்பிக்கிட்டவங்க முகத்துல எந்தத்தெளிவு மில்ல.

கொடுத்த ரசீதுலையும் ஒன்னும் தட்டுப்படாமலிருக்க கடைசியா ஒரு முடிவுக்கே வந்துட்டாரு. நாளைக்கு நாளைக்குன்னு சொல்லியே நாளக்கடத்திட்டு எந்த சேமிப்பும் இல்லாம இருக்கவேண்டியது. அவரவருக்கான சாவு இப்பவோ இன்னும் சத்த நேரத்திலே யோன்னு இருக்கையில வயசு வாலி பத்துல உடம்ப கவனிச்சுக்காம எல்லாக்  கெட்டப்பபழக்கத்தையும் கூட வச்சுக்கிட்டு  கால நேரத்த மனுச மக்கள மதிக்காம  மீசையை முறுக்கிக்கிட்டு தாடிமயிறுகள  வளத்துக்கிட்டு எதையோ நிமித்தப்போற மாதிரி நெஞ்ச நிமித்தித்திரியவேண்டியது. பெறகு நோவு வந்ததும் பெண்டு பிள்ளைக  இருக்கேனு பெரண்டுண்டு அழ வேண்டி யது.  விதிவிட்ட வழியின்னு நெனச்சுக்கிட்டு அவங்கசாமிக முச்சூடையும் துணைக்க ழைச்சுக்கிட்டு சகோதரி கொடுத்த சீட்டோடு  இன்னொரு அறைக்குப்போயி டாக்ட ரப்பார்த்தாரு. எல்லாத்தையும் இவரு நெனச்சதபூராத்தையும் ஒரு பேப்பர்ல எழுதிக்கொடுத்தமாதிரி. அத மருத்துவரு ஒவ்வொன்னாப்பாத்து பரிச்சைப் பேப்பராட்டம் டிக்பண்ணி வந்தவரு. எல்லாம்  ஓகே. நார்மல், சொன்னதும் நூத்துக்கு நூறு மதிப்பெண் கெடைச்ச குழந்தையாட்டாம் தனக்குள் மின்சாரம் பாய கையெடுத்து கும்பிட்டு, நம்மள சுய பரிசோதனை செஞ்சுக்  கிறதுக்கான நல்லவாய்ப்பு இதுவென  நெனச்சு வெளியேறியவர, அறைக்குள்ளிலி ருந்து எட்டிப்பார்த்தாங்க அந்த செவிலி.