சென்னை, பிப்.5- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிட 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர் கள் மனு தாக்கல் செய்து உள்ளனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள், 138 நகராட்சிகளில் 3,833 வார்டு கள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டுகள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவி இடங் கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி பதவி இடங்களுக்கு ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது கடைசி நாளான வெள்ளியன்று ஒரே நாளில் மட்டும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 73 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை சனிக் கிழமை(பிப்.5) நடைபெற்றது. அதிகாரி களின் முன்னிலையில் ஒவ்வொரு வேட்பு மனுக்களும் எடுக்கப்பட்டு ஆய்வு செய் யப்பட்டன. சரியாக பூர்த்தி செய்யப்பட்டு இருந்த வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. தகுதி இல்லாத மனுக்கள் அனைத்தும் உடனுக்குடன் தள்ளுபடி செய்யப்பட்டன. குற்ற வழக்கில் 6 மாதத்துக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் சில இடங்களில் மனு செய்து இருந்தனர். அவர்களது மனுக் கள் நிராகரிக்கப்பட்டன. அதுபோல உள்ளாட்சி அமைப்பு களுக்கு செலுத்த வேண்டிய தொகுதிகளை செலுத்தாமல் நிலுவையில் பாக்கி வைத்து இருப்பவர்களின் வேட்பு மனுக்களும் போட்டியிட தகுதி இல்லாதவைகளாக கரு தப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல் லது பங்குதாரர்கள் மூலமாகவோ ஒப்பந்தம் எடுத்து செய்பவர்களின் மனுக்கள் ஏற் கப்படவில்லை. பல இடங்களில் வேட்பாளர்கள் தங்க ளது வேட்பு மனுக்களை முழுமையாக பூர்த்தி செய்யாமல் விட்டு இருந்தனர். சில சுயேட்சைகள் வேட்பு மனுவை குறிப் பிட்ட படிவத்தில் பூர்த்தி செய்யாமல் இருந்த னர். சில இடங்களில் சுயேட்சைகள் முன் மொழிபவர்களின் கையெழுத்து இல்லாமல் வேட்பு மனுக்களை கொடுத்து உள்ளனர். அத்தகைய மனுக்களும் தள்ளுபடி செய் யப்பட்டன. சென்னையில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற் பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தால் பரிசீலனை செய்வதில் தாமதம் ஏற்பட் டது. பிற்பகல் 3 மணி வரை அதற்கான கால அவகாசம் இருந்தாலும் கூட ஒவ்வொரு வார்டுகளிலும் நூற்றுக்கணக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஆய்வுப்பணி இரவு வரை நீடித்தது.
மனுக்களை திரும்பப்பெற நாளை கடைசிநாள்
வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 7ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் அவ காசம் வழங்கி உள்ளது. எனவே திங்கட் கிழமை மாலை வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர் இறுதி பட்டியல் வெளியாகும். அதன் பிறகே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒவ்வொரு வார்டுகளிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என் பது தெரியும். அதனடிப்படையில் ஓட்டுப்பதி வுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். 7 ஆம் தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் உறுதியானதும் பிரச்சாரம் சூடுபிடிக்கும். 17ஆம் தேதி வரை பிரச்சாரம் செய்ய அவ காசம் வழங்கப்பட்டு உள்ளது. வரும் 19ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 22ஆம் தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறி விக்கப்படும்.