சென்னை, மார்ச் 15- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநி லக்குழு கூட்டம் மார்ச்12,13 ஆகிய இரண்டு நாட்கள் கோவில்பட்டியில் நடைபெற்றது. கூட் டத்திற்கு மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலா ளர் சாமி.நடராஜன், பொருளாளர் கே.பி.பெரு மாள் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துத்துக்குடி மாவட்ட செய லாளர் புவிராஜ் வரவேற்றார். மாவட்ட தலை வர் ஆர்.ராகவன் நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு:
நிலம் கையகப்படுத்துதலில் சட்டவிரோத அணுகுமுறை கூடாது
உற்பத்தி துறையிலும், தொழில்துறை யிலும் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதே மாநிலத்தில் தொழில் உற்பத்தி மற்றும் தொழில்மயமாதலில் மேலும் 200 சதவீதம் கூடுதலாக ஆக்குவது என ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தொழில் மயமாதல் கூடுதல் ஆகும்போது அதற்கான உள்கட்டமைப்பாக இரயில் பாதைகள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், தொழிற் பேட்டைக்கான நிலங்களை கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதை தொடர் ந்து புதிய ரயில் பாதைகளுக்கான திட்டங்களாக 11 எனவும், மாநில மற்றும் தேசிய நெடுஞ் சாலைக்கான திட்டங்கள் என அமலாக்க விவ சாயிகளின் விளை நிலங்கள் கையகப்படுத் தப்படுகின்றன. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் வளர்ச்சியை மனதிற்கொண்டு 33 சதவீதம் அளவிற்கு நிலத்திற்கான வழிகாட்டு தல் மதிப்பு குறைக்கப்பட்டது. இந்த 10 ஆண்டு களில் நிலத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு கூடு தலான போதும், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு தல் மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பத்திர பதிவு செய்யப்படுகிறது. அதனடிப்படையில் தான் விவசாயிகளின் நிலத்திற்கான விலை தீர்மா னிக்கப்படுகிறது. நிலத்திற்கான சந்தை மதிப் பிற்கும், நிலத்திற்கான இழப்பீடு தொகைக் கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறு பாடாக அமைகிறது. கையகப்படுத்தும் நிலத்திற் கான தொகையை தீர்மானிக்கிற போது முறை யான கள ஆய்வு மேற்கொண்டு விலை தீர்மா னிக்கப்பட வேண்டும். மேலும் நிலத்தை கையகப்படுத்தும் அறி விப்பு ஆணையை தரும் போது, சமூக தாக்க அறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை என முன்கூட்டியே விவசாயிகளிடம் தந்து அவர் களின் முழுமையான ஒப்புதல் பெற்ற பின்பு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் துவக்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்துதலில் எந்த வெளிப் படைத் தன்மையும் தமிழக அரசிடம் இல்லா தது வேதனை அளிக்கிறது. இந்த போக்கை நெய்வேலி நிலக்கரி சுரங்கம் இரண்டாவது கட்ட விரிவாக்கத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் பரந் தூர் விமான நிலைய திட்டத்திலும், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி சிப்காட் அமைக்கும் திட்டங்களிலும், திண்டிவனம்-நகரி ரயில் பாதை திட்டத்திலும் மற்றும் பல திட் டங்களுக்கும் நிலத்தை கையகப்படுத்துவதில் பார்க்க முடிகிறது. அத்துடன் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் ஆளும் கட்சி பிரமுகர்களை வைத்து விவ சாயிகளை மிரட்டுவது, அதிகாரிகளை வைத்து விவசாயிகளை தனித்தனியாக சந்தித்து அச்சு றுத்தும் சூழலை ஏற்படுத்துவது என்பது முற்றி லும் ஜனநாயக விரோத செயலாகும். இத்தகைய அணுகுமுறைக்கு விவசாயிகள் சங்க மாநிலக் குழு கடும் கண்டனத்தை தெரி விக்கிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு, மாநில மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு நிலத்தை கைய கப்படுத்தும் போது, வெளிப்படைத் தன்மை யுடன் ஜனநாயகத் தன்மையுடனும், விதிமுறை களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டுமெனவும் மற்றும் தமிழ்நாட்டின் உணவு உற்பத்திக்கு எவ் வித வகையிலும் பாதிப்பும் ஏற்படாத வண்ணம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது. பயிர்கள் பாதிப்பு
மழை அளவு குறைந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி 2022-23 ஆண்டு நடை பெற்ற விவசாயப் பணிகள் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் தென் மாவட்டங்களில், குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத் துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் சில ஒன்றி யங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த பகுதிகளில் பயிரிடப்பட்ட சிறுதானியங்கள் மற்றும் மிளகாய் விவசாய மும் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர் பாதிக்கப் பட்ட விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயி ரம் முதல் 30 ஆயிரம் வரை கந்து வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடிக்கு செலவு செய்துள்ளார்கள். ஆகவே, தமிழக அரசு, போதிய மழை இல்லாததால் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நெல் விவசாயத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கிடவும், பாதிக்கப் பட்ட இதர பயிர்களுக்கு உரிய நிவாரண வழங்கி டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன விலங்குகளால் பயிர் சேதம்
இயற்கையின் ஆதாரமான வனங்கள் அழி வதைத் தொடர்ந்து, வனத்தின் எல்லை சுருங்கி உணவுக்காக, நீருக்காக வனத்திலிருந்து இடம் பெயரும் வன விலங்குகளால் விவசாயப் பயிர் கள் அழிவதும், வன அழிவிற்கு எவ்வித காரண மும் இல்லாத விவசாயிகள் உயிர்ப் பலியாவ தும் சமீப காலத்தில் தமிழ்நாட்டில் அதிகரித் துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, தர்ம புரி, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் யானை, காட்டுப்பன்றி, காட்டு எருமை, மான், மயில், குரங்குகள் போன்ற காட்டு விலங்குகள் கரும்பு, தென்னை, நெல், மக்காச்சோளம், கடலை, வாழை உள்ளிட்ட பயிர்களை அழித்து கடும் சேதத்தை உருவாக்கி வருகின்றன. ஏற்கனவே விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு கட்டுப் படியான விலை கிடைக்காததால் விழி பிதுங்கி நிற்கும் விவசாயிகளுக்கு, காட்டு விலங்கு களால் பயிர்கள் அழிவது மட்டுமல்லாது, விவ சாயிகளின் உயிரையும் பறித்து விடுகிறது. சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சத்தி ரப்பட்டிக்கு அருகில் யானை தாக்கி இரண்டு விவசாயிகள் இறந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 2பேர் இறந்துள்ளனர். இப்படி மாநிலம் முழுவதும் மலையோர கிராமங்களில் விவசாயிகளின் உயிர் பறிபோவது தொடர்ச்சி யாக நடந்து கொண்டுள்ளது. எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படை யில் அகழி அமைப்பது, சோலார் மின் அதிர்வு வேலி அமைப்பது உட்பட நடவடிக்கைகள் எடுத்து வன விலங்கிடமிருந்து விவசாயத்தை யும், விவசாயிகளின் உயிரையும் பாதுகாக்க வேண்டும். காட்டு விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதத்தை, பயிரின் விளைச்சலில் என்ன வரு மானம் கிடைக்குமோ, அதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். காட்டு விலங்குகளால் தாக்கி உயிரிழந்தவருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண் டும். அத்துடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். சாதாரண காயம், கொடுங்காயம் ஏற்பட்டவர்களுக்கு முழு மையான மருத்துவ செலவிற்கான தொகை யினையும் வழங்கிட வேண்டும்.
உபரி நிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது
தமிழ்நாடு முழுவதும் உள்ள உபரி நிலங் களை உபரி நில சட்டப்படி நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு பிரித்து வழங்கிட வேண்டும். சமீ பத்தில் நிலங்களின் மதிப்பு பன்மடங்கு உயர்ந் துள்ள சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு பணிகளுக்கு உபரி நிலங்களை பயன்படுத்த முனைவதாக அறிகிறோம். குறிப்பாக திண்டுக் கல் மாவட்டம், பழனி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தும்பலபட்டி கிராமத்தில் புல எண் 333/1, 334/1 உட்பட பல உட்பிரிவுகளில் 36.09 ஏக்கர் நிலம் 37 விவசாயிகளுக்கு நில ஒப்ப டைப்பு வழங்கப்பட்டது. ஒப்படை வழங்கப் பட்ட அன்றிலிருந்து இன்று வரை மானாவாரி விவசாயம் செய்தும், ஆடு, மாடு மேய்த்துக் கொண்டும் அந்த விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் பல்வேறு நியாயமற்ற காரணங்களை கூறி நிலத்தில் உள்ள விவசாயி களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி கம்பி வேலி போட்டுள்ளனர்; நிலத்திலிருந்து வெளி யேற்றப்பட்ட விவசாயிகள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டுள்ளனர். ஏற்கனவே நிலத்தில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு பட்டா வழங்க கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தை நாடி யுள்ளனர். எனவே உபரி நிலத்தில் உள்ள விவசாயி களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள உபரி நிலங்களை அரசு வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.