திருச்சிராப்பள்ளி, நவ.4 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமாரிடம் வழங்கினர். இந்நிலையில், அனைத்து தரைக் கடைகள் வியாபாரிகள் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்த னர். அந்த மனுவில், “சாலையோர வியாபாரிகளின் வியாபாரக் குழு தேர்தல் வருகிற 22 ஆம் தேதி நடத்தப் பட உள்ளது. தேர்தலுக்கு முன்பாக எடுத்த கணக்கெடுப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் மட்டு மல்லாமல், பல்வேறு தொழில் செய் பவர்கள் தரைக்கடை வியாபாரி களாக இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் லால்குடி, மண்ணச்ச நல்லூர் நகராட்சிகளைச் சேர்ந்த தரைக்கடை வியாபாரிகளையும் இணைத்துள்ளனர். கணக்கெடுப் பில் உள்ள தரைக்கடை வியாபாரி களுக்கு முறையாக அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அதிக பட்சமாக 2000 பேர் மட்டுமே தரைக் கடை வியாபாரிகளாக இருக்கும் நிலையில், பட்டியலில் 6 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.
முறையான கணக்கெடுப்பு
இந்த கணக்கெடுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே தற்போது வியாபாரக் குழு தேர்தலை நடத்தக் கூடாது. அதனை நிறுத்திவிட்டு முறையாக கணக் கெடுப்பு நடத்தி, பட்டியலில் சரியான தரைக்கடை வியாபாரிகளை சேர்த்த பின்னர்தான் தேர்தலை நடத்த வேண்டும்” என கூறியிருந்தனர். இந்த சம்பவத்தின் போது ஆட்சி யர் அலுவலகத்தில் தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். பிறகு மாநகராட்சி அலுவலகத்தை தரைக் கடை வியாபாரிகள் முற்றுகையிட்டு, மாநகராட்சி ஆணையரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும் திருச்சி என்.எஸ்.பி. ரோடு, நந்தி கோயில் தெரு, பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி பகுதியில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் கடையடைப்பு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தரைக் கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, மாவட்டத் தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.