இராமேசுவரம், அக்.8- இராமேஸ்வரத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர். வங்க கடல் மற்றும் மன்னார் வளை குடா கடல் பகுதியில் சூறை காற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள்தடை விதித்திருந்தனர். இந்நிலையில், சனிக்கிழமையன்று மீன்பிடிக்க செல்ல தடை நீக்கப்பட்ட நிலையில், இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஞாயிறனன்று காலை கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள், அதிகள வில் மீன்கள் பிடிபட்டதாக தெரிவித்த னர். ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்க சென்ற நிலையில் மீன்கள் அதிகளவில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.