கோனேரு ரங்கராவ் நிலக்குழுவின் பரிந்துரையின்படி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம், அவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான போராட்டத்தை அகில இந்திய விவசாய சங்கம் நாடுமுழுவதும் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில், திங்களன்று ஆந்திரா மாநிலம் எலூரு மாவட்டத்திற்கு உட்பட்ட தெண்டுலூர் கிராமத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர், தெண்டுலூர் குளத்தில் இறங்கி மீன்பிடி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் அகில இந்திய விவசாய சங்க பொதுச்செயலாளர், சிபிஎம் ஊழியர்கள், கிராமமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.