சென்னை, ஏப்.26- மதுரையை சேர்ந்த கமல் என்ற 38 வயது ஆசிரியருக்கு நாட்டின் முதலாவது மைட்ரைஸ் வால்வு மாற்று அறுவை சிகிச்சை சென்னையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதயத்தில் மிட்ரல் வால்வில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கமலுக்கு தீவிர முச்சுத்திணறல் இருந்தது. இதனால் அவர் தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு உலோகத்தால் ஆன மிட்ரல் வால்வுகளை பொருத்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். மெட்டாலிக் வால்வு பொருத்திக் கொண்டால் வாழ்நாள் முழுக்க ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும் மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்ப தால் அதை அவர் விரும்ப வில்லை. மெட்டாலிக் வால்வு இல்லாமல் வேறு வகை யான வால்வு பொருத்த வழி யுள்ளதா என்று தேடி கடைசி யில் அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் வந்தார். இதையடுத்து அவருக்கு மைட்ரஸ் வால்வு மூலம் செய்யப்பட்ட மிட்ரல் வால்வு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.பி.கோபாலமுருகன் வழி காட்டுதலில் இதய ரத்தக் குழாய் அறுவைசிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பிரஷாந்த் விஜயானந்த்,டாக்டர் மோகன் மற்றும் பல மருத்து வத் துறைகளைச் சேர்ந்த குழுவினர் இதை செய்து முடித்தனர். அமெரிக்கா வைச் சேர்ந்த இந்த வால்வு அரசின் அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்டது. திசு அடிப்படையிலான இந்த வால்வை பொருத்திக் கொண்ட முதல் இந்தியர் கமல் ஆவார். இதனால் அவர் வாழ்நாள் முழுக்க எளிதில் ரத்தம் உறைவ தைத் தடுக்கும் மாத்திரை களை நோயாளி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று டாக்டர் பாலமுருகன் கூறினார்.