tamilnadu

பட்டாசு ஆலை விபத்து: நிவாரணம் அறிவிப்பு

சென்னை, ஜன. 2 - பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், களத்தூர் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் இறந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.