இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 9 ஆசிரியர்கள் உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர், ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கணினி இல்லை. தற்போது கனிம வளத்துறையினர் கணினி உள்ளிட்ட கருவிகளுடன் ஒரு ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து தர முன்வந்துள்ளதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார். மாணவர்களுக்கு போட்டித்தேர்வு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றப் பாதைகளை சிகரம் ஐஏஎஸ் அகாடமி வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். மிக அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அரசுப்பள்ளிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் சாதாரண ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் அரசுப்பள்ளிகளை மேலும் வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல சமூகத்தின் பொறுப்புமாகும்.
நாகர்கோவில், ஜுன் 16- பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு இன்னமும் நம்பிக்கையூட்டிக் கொண்டிருப்பவை அரசுப்பள்ளி களே. அவற்றின் செயல்பாடுகளில் ஏற்படும் முன்னேற்றம் பலரது எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமைகின்றன. அப்படி முன்னேற் றத்தைக் கண்டிருக்கிறது பெருஞ் சிலம்பு அரசு உயர்நிலைப்பள்ளி. தமிழகத்தில் சென்னைக்கு இணையாக கற்றோர் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரி. அர சுப்பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் நீண்ட காலமாக இந்த பெருமையை அளித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியை பெருஞ்சிலம்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் காணலாம். பள்ளியின் பின்புலத் தில் வேளிமலையும் குமரி மாவட் டத்துக்கே உரிய இயற்கை அழகும் கொட்டிக்கிடக்கின்றன. கடந்த மாதம் வரை 3 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் செயல் பட்டு வந்தது இப்பள்ளி. 2011ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது முதல் தொடர்ந்து நூறு சதவிகித தேர்ச்சியை இந்த பள்ளி அளித்து வருகிறது. இந்த ஆண்டிலும் தேர்வு எழுதிய 18 மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி ஆசிரியர்களும் பொது மக்களும் இணைந்து மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக 3 அடுக்குகள் கொண்ட புதிய கட்ட டம் ஆர்எம்எஸ்ஏ நிதியில் ரூ.1 கோடி யே 40 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட் டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. காணொலிக்காட்சி மூலம் வியாழ னன்று (ஜுன் 13) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பள்ளிக் கட்ட டத்தை திறந்துவைத்தார். பள்ளி யில் இதற்காக நடந்த விழாவில் பொதுப்பணித்துறை பொறியாளர் சுதாகரன், ஆர்எம்எஸ்ஏ அதிகாரிகள் வள்ளிவேலு, சுரேஷ்குமார், கிராம கல்விக்குழு தலைவர் ஜோசப்ராஜ், பள்ளி மேலாண்மைக்குழு தலை வர் ஸ்ரீகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஸ்ரீகுமார், தலைமை ஆசிரியர் பி.ஸ்ரீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். - சி.முருகேசன்