சென்னை, செப். 1 - நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தல்கள் நேர்மை யுடனும், நம்பகத் தன்மை யுடனும் நடைபெற தேர்தல் பத்திரங்களை தடை செய்ய வேண்டும் என்று ஜனநாயக மான தேர்தலுக்கான கூட்ட மைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெள்ளி யன்று (செப்.1) சென்னை யில் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் நீதியரசர் து.அரிபரந்தாமன் கூறிய தாவது: வாக்காளர்கள், தாங்கள் அளித்த சின்னத்திற்கு வாக்கு விழுந்துள்ளதா என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் ஜனநாயகமாக நடைபெறவும், வாக்கா ளர்கள் திருப்தி அடையவும் வேண்டும். அதற்கு, இவிஎம் இயந்திரத்தில் வாக்காளர் வாக்களித்ததும், விவிபிஏடி இயந்திரத்தில் உள்ள சிறு திரையில் 7 வினாடிகள் வரை அந்த சின்னம் தெரியும். அந்த சின்னத்தை வாக்காளருக்கு அச்சிட்டு (பிரிண்ட அவுட்) தர வேண்டும். அவற்றை ஒரு பெட்டியில் சேகரித்து வாக்கு எண்ணிக்கையின்போது எண்ண வேண்டும். விவிபி ஏடி இயந்திரம், அச்சிட்ட காகிதம் ஆகியவற்றை ஒப்பிட வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு இருந்தால் விவி பிஏடி இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெயர் நீக்கம் பிரச்சனை
வாக்காளர் பட்டியலில் இருந்து குறிப்பாக சிறு பான்மையினர் அதிகளவு நீக்கப்படுவதாக புகார் உள்ளது. வாக்காளர் அல்லது அவரது குடும்பத் தில் உள்ள ஒருவருக்கு தக வல் தெரிவிக்காமல், வாக்கா ளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கக்கூடாது. தன்னிச்சையாக சிறு பான்மையினர் பெயரை நீக்க கூடாது. வாக்காளர் பட்டி யலை ஆணைய இணைய தளத்தில் தேடும் வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத் தன்மை யற்றது. சட்ட விரோத மானது. இதை தடை செய்ய வேண்டும். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது வருத்தமளிக்கிறது. இது போன்ற வழக்குகளில் நீதி மன்றம் முன்னுரிமை தர வேண்டும். தேர்தல் ஆணையர் களை நியமிக்க உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்துள் ளது. தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி யுள்ளது என்று அவர் கூறி னார். இந்த செய்தியாளர் சந்தி ப்பின்போது அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பிராங்கோ, முனை வர் எம்.சி.ராஜன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.