சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற விவசாயிகள் - தொழிலாளர் மகா முற்றுகைப் போராட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணன் ஆற்றிய உரையின் சுருக்கம்:
“கார்ப்பரேட்டுகளின் கொள்ளை யையும், மதவாத, ஜனநா யக விரோத சக்திகளையும் எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள் இணைந்து ஒன்றுபட்டு வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை நடத்துகிறோம். தில்லி யில் 380 நாட்கள் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 750 விவசாயிகள் உயிர் தியாகம் செய்தனர். 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்த போது, ஒவ்வொருக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும், வேளாண் பொருட் களின் உற்பத்திச் செலவை விட கூடு தலாக 50 விழுக்காடு சேர்த்து விலை நிர்ணயம் செய்யப்படும், 100 நாள் வேலைவழங்கும் திட்டத்தை 200 நாட் களாக மாற்றி, சம்பளம் உயர்த்தப்படும். உரம், பூச்சி மருந்து மானிய விலை யில் தரப்படும். குறைந்த வட்டியில் கடன் தரப்படும். பயிர்க் காப்பீட்டுத் தொகையை அரசே வழங்கும். ஆண்டு க்கு 2 கோடி பேருக்கு வேலை தரப்படும், பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள், விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்றெல்லாம் கூறினார். ஆனால், 9 ஆண்டுகால ஆட்சியில் ஒரு வாக்குறுதி யை கூட நிறைவேற்றவில்லை.
5 லட்சம் பேர் தற்கொலை
கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், விவ சாயத் தொழிலாளர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், வேலையில்லாத இளைஞர்கள் 50 ஆயிரத்துக்கு மேற் பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். அதாவது, அரசு கொடுத்துள்ள தகவல்களின்படியே சுமார் 5 லட்சம் பேர் மோடி ஆட்சியில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். பெண் விவசாயிகள், பழங்குடியின விவசாயிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
வேளாண் நெருக்கடி
உலக வரலாற்றில் இதுவரை கண்டி ராத வகையில் இந்தியாவில் வேளாண் நெருக்கடி நிலவுகிறது. பிரதமர் மோடி, உற்பத்திச் செலவை விட கூடுதலாக 50 விழுக்காடு விலை நிர்ண யம் செய்யப்படும் என்றார். அதன்படி 2022-ஆம் ஆண்டு ஒவ்வொரு விவசாய குடும்பமும் 3.71 லட்சம் ரூபாய் வரு வாய் ஈட்டி இருக்க வேண்டும். ஆனால், 1.22 லட்சம் மட்டுமே கிடைக்கிறது. இது பற்றி கேட்டால், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டிய அவசியமில்லை என்று ஒன்றிய வேளாண்துறை அமை ச்சர் வெட்கங்கெட்ட முறையில் கூறு கிறார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக மோடிசொன்னார். இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் வேலையில்லாத் திண்டா ட்டம் நிலவுகிறது. வேலையற்ற இளைஞர்களை பக்கோடா விற்க சொல்லி கிண்டல்செய்கிறார். வேலை வாய்ப்பை உருவாக்கும் பொதுத் துறைகளை விற்பனை செய்துவரு கிறார். அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக் கிறார். ராணுவத்தில் கூட ஒப்பந்த முறை புகுத்தப்பட்டுள்ளது.
‘மோதானி’ மாடல்
நாட்டின் கனிம வளங்களை, பொதுத் துறைகளை, கார்ப்பரேட்கள் கொள்ளையடிக்கின்றனர். கோவிட் காலத்தில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை தொகுப்புகளாக மாற்றி யது. 8 மணி நேர வேலை என்று போராடி பெற்ற உரிமையை பறித்து, சில மாநிலங்களில் 12 மணி நேரமாக மாற்றப் பட்டுள்ளது. கர்நாடகாவில் 12 மணி நேர வேலையை அமல்படுத்த முயற்சிக் கின்றனர். தமிழகத்தில் தொழிலாளர் களின் குரலுக்கு மதிப்பளித்து 12 மணி நேர வேலைநேரத்தை திரும்பப் பெறப் பட்டது.
மாநில உரிமைகள் பறிப்பு
பாஜக - ஆர்எஸ்எஸ் தமிழ்நாடு, கேரளாவை குறிவைத்துத் தாக்கு கின்றன. மாநில உரிமைகளுக்காக போராட வேண்டி உள்ளது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வெற்றிபெற்றதுபோல், மாற்றுக் கொள்கை யை அமல்படுத்த ஒன்று பட்டு போராடுவோம். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவான அரசை கொண்டுவருவோம். பாஜக வை ஆதரிக்கும் பத்திரிகைகள், விவ சாயிகள் தொழிலாளர்கள் ஒற்றுமை நீடிக்காது என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. டிராக்டரை பார்த்தாலே பிரதமர் மோடி அஞ்சி நடுங்குகிறார். பிரதமர் மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவில்லை. இலங்கையில், இரட்டை எஞ்சின் (கோத்தபய ராஜ பக்சே, மகேந்திர ராஜபக்சே) என்று கூறி மக்களை சுரண்டினார்கள். அந்த மக்கள் ஒன்றுபட்டு போராடியதன் விளைவு அவர்கள் நாட்டை விட்டு ஓடினர். இதை மோடி உணர வேண்டும். புதிய வரலாற்றை படைக்க நடைபெறும் இந்த போராட்டம், வெற்றிபெறும் வரை தொடரும்; போராடுவோம்.