கோயம்புத்தூர்,ஏப். 10- பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் எத்தனை ஆண்டுகாலம் போராடிக் கொண்டிருப்பது, தமிழக அரசு உரிய இழப்பீட்டை தர வேண்டும், இல்லையேல் நிலத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என சிபிஎம் மாநி லச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வலியுறுத்தி னார். தமிழக அரசு மற்றும் உயர் கல்வித் துறை மற்றும் பாரதியார் பல்கலைக்கழ கத்திற்கு நிலம் கொடுத்த வர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநி லச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தலைமையில், பாதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான விவசாயிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப் பாட்டம் கோவை வடவள்ளி யில் நடைபெற்றது. 1977 ஆம் ஆண்டு பல் கலைக்கழகத்திற்கு சுமார் 360 குடும்பத்தினரிடம் இருந்து தமிழ்நாடு அரசு 916 ஏக்கர் நிலம் கையகப் படுத்தியது. இந்த நிலத் திற்கு மிக சொற்பமான தொகையை இழப்பீடாக நிர்ணயித்தது அரசு. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றம் சென்று உரிய உத்தரவை பெற்ற பிறகும், ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறாது என்பதுபோல நீதி மன்றம் உத்தரவிட்ட இழப்பீடை இதுவரையில் தராமல் ஆட்சியாளர்கள் இழுத்தடித்து வருகின்ற னர். மூன்று தலைமுறை யாக நிலம் கொடுத்த விவ சாயிகளின் குடும்பங்கள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போரா ட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசின் கவ னத்தை ஈர்க்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் வட வள்ளியில் ஞாயிறன்று நடை பெற்றது. இதில், பங்கேற்று சிபிஎம் தமிழ்நாடு மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “கோவை யில், பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு 40 ஆண்டு களுக்கு முன்பு நிலம் கைய கப்படுத்தப்பட்டது, விவ சாயிகளுக்கு இன்று வரை நிவாரணம் மற்றும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. நீதி மன்றத்தில் பலமுறை தீர்ப்பு வழங்கியும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நீதி மன்றத்தின் உத்தரவை அவ ரின் கவனத்திற்கு கொண்டு சென்றபின் முதல் தவணை யாக 40 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. பிறகு மீண்டும் இழுத்தடிக்கப் பட்டது.
ஓபிஎஸ்-இபிஎஸ் முதல் வர்களாக இருந்தபோது, பாதிக்கப்பட்ட விவசாயி கள் குறித்து எந்த கவலை யும் அற்று இருந்தனர். தற்போதைய அரசு விவ சாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும். 1977ஆம் ஆண்டு நிலத்தை அரசு பல்கலைக்கழகத்திற்கு கொடுத்துவிட்டு இது நாள் வரையில் 45 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார்கள்; கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் உள்ள அம்பானி, அதானி போன்ற வர்கள் அரசை ஏமாற்றுகின்ற தொகையோடு ஒப்பிடுகை யில் இது மிக சொற்ப மானதே. இந்த விவசாயிகளி டத்தில் நிலம் எடுக்கப்பட் டது. 2013 நில கையகப் படுத்தும் சட்டம், பிரிட்டிஷ் அரசு சட்டத்தின் படி நிலம் பறிக்கப்பட்டது, தற்போது உள்ள சட்டம் நிலத்தை எடுக்க வேண்டுமானால் நான்கு மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறுகிறது. அரசு இவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தினால் நான்கு மடங்கு இழப்பீடு வழங்க நேரிடும்; மாறாக இவர்கள் கேட்பது ஒரு சிறிய தொகையே.
அப்படி அரசினால் வழங்க முடியாவிட்டால் ஆர்.ஆர்.பாலிசிசட்டத் திருத்தத்தின் படி மறு குடிய மர்வு செய்ய வேண்டும். அரசுக்கு இரண்டு மாற்று வாய்ப்புகள் உள்ளன. பல்கலைக்கழக நிலத்தில் பாதியை அரசு திரும்ப வழங்கினால் அதைப் பெற்று விவசாயி கள் இரண்டு மடங்கு இழப்பீடு தொகைக்கு சம மாக விற்றால் தொகை கிடைக்கும். மற்றொன்று, அரசுக்கு தேவையானது போக 150 ஏக்கர் புறம் போக்கோடு சுமார் 400 ஏக்கர் நிலம் அங்கு உள்ளது. அதை அரசு விற்பனை செய்வது என்று முடிவு செய்தால் இழப்பீடு தொகையை விட கூடுதலான தொகை அர சுக்கு கிடைக்கும்; அதனை கொண்டு விவசாயிகளுக்கு தரலாம். இந்த ஆலோசனை யை தமிழக முதல்வரை சந்தித்து அழுத்தமாக முன்வைக்க இருக்கிறோம். இழப்பீடு தரவேண்டும், இல்லையேல் நிலத்தை தர வேண்டும் என்கிற இந்த கோரிக்கைக்கான போராட் டத்தை பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றிபெறும்வரையில் போராடும்” என்றார்.