மதுரை, ஜூலை 29- மத்திய அரசின் விவசாய விரோதக்கொள்கை களைக் கண்டித்து மதுரை, விருதுநகர் மாவட்டங்க ளில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தங்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலை மையில், செக்காணுரனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் க.பிரேம லதா, டி.வேலம்மாள், தலைமையில், திருமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரமேஷ், முரு கேசன், பாண்டிச்செல்வி மற்றும் அனைத்து விவசாயி கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டாம்பட்டியில் மார்ரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரன், திமுக சார்பில் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். சேடபட்டி ஒன்றியம் வாகைகுளத்தில் நடைபெற்ற சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தங்கக் கொடி தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் கள் சங்க மாவட்டப் பொருளாளர் ஜோதிலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூணிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் அர்ஜூனன், திருமலை, நகர் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர் வத்திராயிருப்பு ஒன்றியத்தில் செயலாளர் சுந்தர்ராஜன், சௌந்தரராஜன் மகேந்திரன், மணிக்குமார், சிபிஐ சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 70 கிராமங்களில் 200 இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது முது குளத்தூர், கடலாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் அய்யம்பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.கே.தண்டியப்பன், திமுக நகர் செயலாளர் நாகூர் கனி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் சுந்தர லிங்கம் ஆகியோர் தலைமையில் திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.