tamilnadu

img

மழையில் நனைந்து அழுகிய உளுந்து வேதனையில் விவசாயிகள்

மயிலாடுதுறை, ஏப்.18 - மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மற்றும் அறுவடை செய்யப்பட்டு வயலில் காய்ச்சலுக்கு குவிக்கப்பட்டிருந்த உளுந்து பயிர்கள் நனைந்து அழுகி நாசமாகி யிருக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் காவிரி  கடைமடை மாவட்டமான மயிலாடு துறை மாவட்டத்தில் உளுந்து பயிர் அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் தரங்கம் பாடி வட்டத்தில் திருக்கடையூர், கிள்ளியூர் ஊராட்சி, நட்சத்திரமாலை, இரவணியன்கோட்டம், கொத்தங்குடி ஊராட்சி, பனங்குடி, காருகுடி, செரு குடி, விளாகம் உள்ளிட்ட கிராமங் களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் உளுந்து  பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறு வடை பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் 4 நாட்கள் பெய்த கோடை மழையினால் அறு வடை செய்த உளுந்து பயிர்களை விவ சாயிகள் வயலிலேயே குவித்து காய்ச்சலுக்காக மூடி வைத்திருந்தனர். திடீரென பெய்த தொடர்மழையால் உளுந்து அழுகியும், முளைக்கவும் தொடங்கியுள்ளது. கடந்த சம்பா அறுவடையின்போது மழையால் அறு வடை பாதிக்கப்பட்டதாலும், தற் போது உளுந்து பயிர் அறுவடை யிலும் மழையில் நனைந்து அழுகிய தாலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றி யச் செயலாளர் என்.சந்திரமோகன் கூறு கையில், உடனடியாக தமிழக அரசு வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.