tamilnadu

img

திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளோம்

புதுதில்லி,டிச.8- அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்ப தையும், எழுத்துப்பூர்வமாக கொடுப்பதையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளன.அதனை திருத்தி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளோம் என்று  விவசாயிகள் சங்க தலைவர் அசோக் தாவ்லே  தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக நடைபெற்ற விவசா யிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு பணிந்து மோடி அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. ஆனால் மேலும் சில முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசா யிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட்டு விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று ஒன்றிய  அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் போராட்டத்தை வாபஸ் பெற  மறுத்த விவசாய சங்கங்கள், அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த 5 பேர் குழு அமைத்து, அறிவிப்பு வெளியிட்டது.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்றுஅரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே  செய்தியாளர்களிடம் கூறுகையில், விவசாயி களுக்கு இழப்பீடு பெயரளவில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. எங்களுக்கு பஞ்சாப் மாதிரி போன்ற உறுதியான ஒன்று தேவை. அவர்கள் மின்சார மசோதாவை திரும்பப் பெறுவதாகவும் உறுதியளித்தனர், ஆனால் இப்போது அவர்கள் அதை பங்குதாரர்களுடன் விவாதித்து பின்னர் அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விரும்புகிறார்கள். இது முரண்பாடானது.   எம்.எஸ்.பி-ஐ மையமாகக் கொண்ட குழுவை உருவாக்குவது அவசியம்.இதில்  விவசாயிகள் சங்க உறுப்பினர்கள்  இடம்பெற வேண்டும். நாங்கள் போராட்டத்தை முடித்த பிறகு விவசாயிகள்  மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதையும், எழுத்துப்பூர்வமாக  கொடுப்பதையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளது. எனவே சில திருத்தங்களுடன் அதை திருப்பி அனுப்பினோம். அவர்களின் பதி லுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம்

எங்களுடைய கோரிக்கைகள் அனைத் தையும் அரசு ஏற்கும் வரை விவசாயி கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்க தலைவர் குர்ராம் சிங் தெரிவித்துள்ளார். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்கு பின் விவசாயி கள் சங்க தலைவர் குர்நாம் சிங் செய்தி யாளர்களிடம் கூறுகையில்,  அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு ஏற்கும் வரை தில்லியில் போராட்டம் தொடரும்.  விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.