tamilnadu

img

தேனியில் விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் : பெ.சண்முகம்

தேனி ,ஏப்.28-  தேனி மாவட்டத்தில் வன விவசாயி கள் வெளியேற்றம், மலை மாடுகள் மேய்ச்சலுக்கு தடை விதித்த விவ காரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு  இறுதியானது அல்ல.சட்டப்பேரவை யில் வனத்துறை அமைச்சர் கூறிய பதில் ஏற்புடையது அல்ல. எனவே வன  விவசாயிகளை, மலை மாடுகள், நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகை யில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய  வேண்டும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ. சண்முகம் வேண்டுகோள் விடுத்துள் ளார்.   மேகமலை -வருசநாடு வன விவசாயி களை வெளியேற்றுவது, வனப் பகுதி களில் மாடு மேய்க்க தடை போன்ற மக்க ளை பாதிக்கும் சட்ட விரோத தீர்ப்பு களுக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்யக் கோரி ஏப்ரல் 28  வியாழனன்று தேனி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு தலைமை வகித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது:

சென்னை உயர்நீதிமன்ற மதுரை  கிளை இரண்டு மோசமான தீர்ப்புகளை  வழங்கியுள்ளது. அதில் நான்கு மாத காலத்தில் வன விவசாயிகளை சிறப்பு காவல்படை அமைத்து வெளியேற்ற வேண்டும்; வன உயிரின சரணாலயம், புலிகள் காப்பகம், தேசிய பூங்கா ஆகிய  இடங்களில் ஆடு, மாடு மேய்க்க தடை விதித்துள்ளது. இதனால் பாரம்பரிய கால்நடை இனங்கள், இயற்கை விவ சாயம் அழியும், உணவுப் பழக்கம் பாதிக் கும். உயர்நீதிமன்ற கிளை,  வன உரிமை சட்டத்தை பின்பற்றாமல் இந்த தீர்ப்பை அளித்துள்ளது .வன உரிமை சட்டம் மேய்ச்சல் உரிமையை  சட்டப்படி அங்கீகரித்துள்ளது. இந்த தீர்ப்பு சட்ட விரோதமான தீர்ப்பு ஆகும். இதனால் தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். கால்நடை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

96 கிராமங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம்

பொது நல வழக்கில்  மேகமலை, வரு ஷநாடு பகுதியில் உள்ள வன விவசாயி களான  சாதாரண  மக்களை சிறப்பு காவல் படை அமைத்து  4 மாதத்தில்  வெளி யேற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் 8 ஊராட்சிகளை சேர்ந்த 96  கிராமங்களில்  பத்தாயிரம் பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்  சூழல் உள்ளது. கிராம சபை, வன உரிமை குழு, கோட்ட அளவிலான, மாவட்ட அளவிலான வன உரிமைக் குழு உள்ள போது அவர்களின் அதி காரத்தை நீதிபதிகள் கையில் எடுத்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் வன உரிமை சட்டப்படி  பட்டா வழங்கக் கோரி அப்போதைய ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் முறைப்படி மனுக்கள் அனுப்பப்பட்டு நட வடிக்கை இருந்தது. கொரோனா காரணமாக கிராம சபை, வன உரிமைக் குழு கூடவில்லை. நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் பேசும் போது  உண்மையை மறைத்து கூறியுள்ளார். வன உரிமைச் சட்டப்படி கோப்பு நிலு வையில் இருந்தது என்று சொல்லியிருந்தால் இத்தகைய தீர்ப்பு வந்திருக் காது.

ஆண்டிபட்டி  எம்எல்ஏவுக்கு பாராட்டு

சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவை யில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதி என்ற அடிப்படையில் மக்களின் உணர்வு களை அப்படியே பிரதிபலித்துள்ளார். அவருக்கு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு பதிலளித்த வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீதிமன்ற தீர்ப்பு,மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் தெரிவித்துள் ளார்.அவரது பதில் ஏற்புடையது அல்ல. உயர்நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது அல்ல. நிரந்தர தீர்ப்பும் அல்ல. நீட் தேர்வுக்கு ஆதரவாகக்கூட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. தமிழக அரசு அதை ஏற்றுக் கொண்ட தா? தொடர்ந்து போராடித்தான் வருகிறது. வன விவசாயிகள்  ,கால்நடை வளர்ப்போர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். வனத்துறை அமைச்சருக்கு முதல்வர் தக்க அறிவுரை வழங்க வேண்டும். முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்   தேனிக்கு  சனிக்கிழமையன்று வருகைதர உள்ள தமிழக முதல்வர், மாவட்டத்தின் முக்கியப் பிரச்சனையான வன விவசாயி களை பாதுகாப்பது,மேய்ச்சல் அனுமதி  குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உறுதி அளித்து, வருசநாடு பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

காவல்துறைக்கு கண்டனம் 

அமைதியான வழியில், கால்நடைக ளுடன் ஆர்ப்பாட்டம் என முறைப்படி அனு மதி பெற்று நடைபெறுகிற போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் தேனி மாவட்ட காவல்துறை ஈடுபட்டுள்ளது. வியாழன் காலை முழுவதும் காவல்துறையினர் மாடு மேய்க்கும் வேலை செய்துள்ளனர். அரசி யல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை பறிக்கும் செயலாகும் .கால்நடைகளை மறிப்பது, பொதுப் போக்குவரத்தை நிறுத்து வது போன்ற செயல்களில் ஈடுபட்டது பெரும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு பெ.சண்முகம் பேசினார்.. ஆர்ப்பாட்டத்தில் 300 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டு முழக்கமிட்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, விவசாயிகள் சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்டச்செயலாளர் டி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.ஜெயராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் சி.முருகன் ,மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சு.வெண்மணி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.முனீஸ் வரன்,விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.தயாளன்,கர்னல் பென்னிகுக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்க தலைவர் கென்னடி, செயலாளர் ஜெயபிரகாஷ், பொருளாளர் ராம்குமார், விவசாயிகள் சங்க தலைவர்கள் எல்.ஆர்.சங்கரசுப்பு, போஸ், ராமசாமி, மார்க்சிஸ்ட் கட்சி தேனி செயலாளர் இ.தர்மர் ,கடமலை -மயிலை ஒன்றிய செயலாளர் போஸ், திமுக மாவட்ட பிரதிநிதி மொக்கராஜ், தும்மக்குண்டு ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னக்காளை, மேகமலை ஊராட்சி முன்னாள் தலைவர் தமிழன், துணைத்தலைவர் சுந்தரம், வனக்குழு உறுப்பினர்கள் குணசேகரன் ,அழகுமணி, ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆட்சியரிடம் மனு 

பின்னர் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளி தரனை நேரில் சந்தித்து பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் மனு அளித்தனர். தேனி வரும் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், மேல் முறையீடு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய  நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர் உறுதியளித்தார்.

சூலப்புரம், திம்மிநாயக்கன்பட்டி, கரட்டுப்பட்டி, சித்தார்பட்டி, வயல்பட்டி, ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்திற்கு  புறப்பட தயாரான மாடுகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் மஞ்சனூத்து சோதனைச்சாவடி, கொம்புக்காரன் புலியூர் சோதனைச்சாவடி, வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு ஆகிய இடங்களில் வன விவசயிகளை தடுத்து நிறுத்தி அராஜகம் செய்தனர். மலை மாடுகள் உள்ள தொழுவத்தில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர்.