திருவாரூர், டிச.27- வேளாண் சட்டங்களை வீழ்த்தி மோடி அரசை பணியச் செய்த விவசாயிகளின் மகா எழுச்சி பெரும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக திருவாரூரில் புதன்கிழமை (டிச.29) ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் வெற்றி பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற வுள்ளது. மாலை 3 மணியளவில் திருவாரூர் ரயில் நிலையம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டு தெற்கு வீதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இடதுசாரி இயக்க விவசாய சங்கத் தலைவர்கள் அசோக் தாவ்லே, அதுல்குமார் அஞ்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று உரையாற்றுகின்றனர்.