கடலூர், ஏப்.17- விருத்தாசலத்தில் குடும்ப வன முறையின் உச்சமாக இளம் பெண் மீது மாமியாரே ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயன்றார். இந்த சம்பவம் குறித்து மகளிர் சட்ட உதவி மன்றத்தின் மாநிலச் செயலாளர் எஸ். மனோன் மணி, மாதர் சங்க மாநிலப் பொருளா ளர் ஜி.பிரமிளா, வழக்கறிஞர் சங்க தலைவர் வி.மேரி, மனிதம் அமைப்பின் வழக்கறிஞர் ஜோ.லெனின், மாதர் சங்க மாவட்டத் தலைவர்கள் பி.தேன்மொழி, மல்லிகா, அன்புச்செல்வி, சந்தன மேரி, உள்ளிட்டோர் கொண்ட குழு விசா ரணை நடத்தியது. இந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையை திங்களன்று(ஏப்.17) கட லூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி வெளியிட மனிதம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பா ளர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு பெற்றுக் கொண்டார். பின்னர், இந்த அறிக்கை யை மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் ராஜாராமை சந்தித்து நேரில் வழங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உ. வாசுகி,“இந்த வழக்கில் சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ. மாத வன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், என்.எஸ். அசோ கன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.