tamilnadu

img

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, மே 17- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து  செவ்வாய்க்கிழமை (மே 17) காலை 1000 கன அடியாக அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்க ளில் தென்பெண்ணை ஆற்றங்கரை யோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை  வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் பட்டாலும், 12 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை  மற்றும் கெலவரப்பள்ளி அணையி லிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இம்மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கேடுத்து ஓடியது. அணையின் அருகே உள்ள மலையில் இருந்து அதி களவில் தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 48 அடியை எட்டினால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். எப்போது வேண்டுமானாலும் அணை யில் இருந்து தென்பெண்ணை ஆற்றில்  தண்ணீர் திறக்கப்படும் என்பதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணா மலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட் டுள்ளது. எனவே, இரவில் யாரும்  ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ  கூடாது என்று பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர். மேலும், அணை மடையில் இருந்து  வெளியேறும் தண்ணீரில், அப்பகுதி இளைஞர்கள் மீன்கள் பிடித்து, மகிழ்ந்தனர்.