tamilnadu

img

பல்லுயிர் பெருக்கமும் மனித நலமும் - ஓர் ஆய்வு

இன்றைய உலகில் பல்லுயிர் பெருக்கமும் மனித நலமும் பிரிக்க முடியாத இரு கூறுகளாக மாறியுள்ளன. இயற்கையின் சமநிலையும் மனித வாழ்வின் தரமும் ஒன்றையொன்று சார்ந்தே இயங்குகின்றன என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

உயிரினங்களின் அழிவும் அதன் தாக்கமும்

‘லிவிங் பிளானெட் இன்டெக்ஸ் (LPI)  2024’-ன் அறிக்கை மிகவும் கவலைக்கிட மான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் கண்காணிக்கப்படும் 34,836 வனவிலங்கு இனங்களில், குறிப்பாக 5,495 முதுகெலும்பு உயிரி னங்களில், மூன்றில் இரண்டு பங்கு (73 சதவீதம்) எண்ணிக்கை குறைந்துள்ளது. 1970 முதல் 2020 வரையிலான 50 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 2.6  சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும்.

சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலை

நிலவாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 69 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு விவசாய விரிவாக்கமும், தீவிர சாகுபடி முறைகளும் முக்கிய காரணங்களாகும். நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 85 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வாழ்விட மாற்றங்கள், அதிகப்படியான அறுவடை, மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகி யவை இதற்கு காரணமாகும். கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 56 சதவீத குறைவு ஏற்பட்டுள்ளது, இதற்கு அதிகப்படி யான மீன்பிடிப்பு முக்கிய காரணமாகும்.

உணவுப் பாதுகாப்பின் நெருக்கடி

உலகின் உணவு பாதுகாப்பு நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 73.5 கோடி மக்கள் தினமும் பட்டினியால் வாடும் அவலம் தொடர்கிறது. அதே நேரத்தில் உணவு நுகர்வில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் ஒருவர் ஆண்டுக்கு சரா சரியாக 122.8 கிலோ இறைச்சியை நுகர்கிறார். ஆனால் இந்தியாவில் இது வெறும் 6.63 கிலோவாக உள்ளது. மேலும், உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் 30 முதல் 40 சதவீதம் வீணாக்கப்படுகிறது.

நிதி சவால்களும் தீர்வுகளும்

இயற்கை எதிர்மறை நிதி (Nature Negative Finance - NNF) - அதாவது, இயற்கையை அழித்து திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஆகும் செலவு  - ஆண்டுக்கு 700 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகும். ஆனால் இயற்கை அடிப்படை தீர்வுகளுக்கு (Nature Based Solutions) ஒதுக்கப்படும் தொகை வெறும் 200 பில்லியன் டாலர்கள் மட்டுமே. இது எதிர்மறை நிதியில் 3 சதவீதமே ஆகும்.  காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 2021-22 காலகட்டத்தில் 1.3 டிரில்லியன் டாலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. ஆனால் 2030-க்குள் இதற்கு 9 டிரில்லி யன் டாலர்கள் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

1.    அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல் மூலம் உணவு வீணாவதை தடுக்க வேண்டும். 2.    நிலையான மீன்பிடி முறைகளை ஊக்கு வித்து, சிறந்த மீன்பிடி உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். 3. விவசாயத்தில் பசுமை இல்ல வாயு வெளி யேற்றத்தைக் குறைக்க நவீன தொழில்நு ட்பங்களை பயன்படுத்த வேண்டும். 4. தாவர அடிப்படையிலான உணவுகளை ஊக்குவிக்க வேண்டும். 5.    பழங்குடி மக்களின் பாரம்பரிய நில உரிமைகளை அங்கீகரித்து, அவர்களின் இயற்கை வள பாதுகாப்பு முறைகளை ஊக்குவிக்க வேண்டும்.

நிதி ஆதாரங்களை திருப்பி விடுதல்

சுற்றுச் சூழல் நிதியம் போன்ற புதிய முயற்சிகள் மூலம் மரபுசார் வளங்களின் பயன்பாட்டிலிருந்து வரும் வருவாயில் ஒரு சிறு பகுதியை (1% அல்லது 0.1%) இயற்கை பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும். இயற்கைக்கு எதிரான மானியங்களை படிப்படியாக குறைத்து, அந்த நிதியை இயற்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாற்ற வேண்டும்.

காலத்தின் கட்டாயம்

பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பும் மனித நலமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இயற்கையை பாதுகாப்பது என்பது மனித குலத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு சமமானது.  எனவே, தனிநபர் முதல் அரசுகள் வரை அனைத்து மட்டங்களிலும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். இயற்கையோடு இணைந்த  வளர்ச்சியே நிலையான வளர்ச்சியாக இருக்க முடியும். எக்கனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி  (நவ.9, 2024) தலையங்கம்  தமிழில் :  ராஜூ பாய்