1945-46ஆம் ஆண்டுகள் கப்பற்படை மாலுமிகளின் எழுச்சியையும் அவர் களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான போராட்டங்களையும் கண்ட ஆண்டு களாக இருந்தன. மட்டுமல்ல, பொதுவாகவே இக்காலம் உழைக்கும் மக்களின் ஏராளமான போராட்டங்கள் உருவான காலமாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் பாசிசத்திற்கு எதிராகவும், நேச நாடுகளுக்கு ஆதரவாகவும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரசியல் நிலைபாடு இருந்தது உண்மை தான். ஆயினும், பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திற்கு எதிரான விடுதலை குரலை ஒலித்துக்கொண்டே அதற்கான போராட்டங் களை நடத்திக்கொண்டே தான் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்த அரசியல் நிலைபாட்டை மேற்கொண்டது.
தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும்
பாசிச வீழ்ச்சிக்குப் பிறகு தங்கள் வாழ்நிலை யிலும், ஊதியத்திலும் பெரும் முன்னேற்றம் இருக்கும் என இந்திய தொழிலாளி வர்க்கமும், இதர பகுதி உழைப்பாளிகளும் எதிர்பார்த்த னர். பிரிட்டன் உட்பட வெளிநாட்டு நிறுவனங் களின் தொழிலாளர்கள் மட்டுமல்ல; இந்திய முதலாளிகளுக்குச் சொந்தமான நிறு வனங்களில் பணியாற்றும் தொழிலாளர் களும் இந்த மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். ஆனால், நடைமுறையில் இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிப் போனது. ஆம்! வாழ்நிலை, வேலைவாய்ப்பு, ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது மட்டுமல்ல, இவற்றின் மீது பிரிட்டிஷ் இந்திய முதலாளிகள் பெரும் தாக்குதலை நடத்தினார்கள். போர்க்காலத்தில் நியமிக்கப்பட்ட ஏராளமான தொழிலாளர் களின் வேலைகள் பறிக்கப்பட்டன. அவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டது. லண்டனிலிருந்து வெளியான “தி டைம்ஸ்” ஏடு தெரிவித்த தகவல்படி இக்காலத்தில் இந்தியாவில் 70 லட்சம் பேர் வேலையிழந்தார் கள். தொழிற்சாலைகளில் மட்டுமல்ல அரசு அலுவலகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், ராணுவ சேவை என பல துறைகளிலும் இந்த ஆட்குறைப்பு அமலானது. இதுமட்டுமல்ல; தாங்க முடியாதபடி விலைவாசி உயர்வும் மக்க ளை வாட்டியது. இது மட்டுமல்ல, உணவு தானியப் பற்றாக்குறையும், ரேசன் விநியோக குறைப்பும் வெந்தபுண்ணில் வேல்கொண்டு பாய்ச்சும் கொடூரமான நிலையை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தியது.
வேலைநிறுத்த எழுச்சி
இயல்பாகவே, இத்தகைய சூழல் உழைப் பாளி மக்களிடையே பெரும் ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. இச்சூழல் அவர்களை நீடித்த வேலைநிறுத்தங்களுக்குத் தள்ளியது. 1946ஆம் ஆண்டு மட்டும் 1629 வேலைநிறுத்தங்கள் நடந்தன. இப்போராட்டங் களில் 19,61,948 தொழிலாளர்கள் பங்கேற்ற னர். இந்தப்போராட்டங்களின் எண்ணிக்கை 1945ஆம் ஆண்டு நிலவரத்தைப் போல இரண்டு மடங்கு அதிகம் என்பதும், பங்கேற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 1/2 மடங்கு அதிகம் என்பதும் சுரண்டும் வர்க்கத்தையும், அதிகார வர்க்கத்தையும் மிரள வைத்தது. தொழிலாளர்கள் மட்டுமல்ல; வங்கிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஊழியர்களும் கூட லட்சோபலட்சம் பேர் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் செய்தார்கள்.
100 சதவீத ரயில்வே தொழிலாளர்கள்
இக்காலத்தில் நடத்தப்பட்ட ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்த வாக்கெடுப்பில் 100 சதவீதம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதனைத் தொடர்ந்து தென்னக ரயில்வே தொழிலாளர்கள் முழுஅளவில் வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். கடும் அடக்கு முறைகள், பழிவாங்கல்கள், துப்பாக்கிச்சூடு என எந்த ஒடுக்குமுறையும் அவர்களை பணி யவைக்க முடியவில்லை. உறுதியுடன் அவற்றை எதிர்கொண்டார்கள். துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 400 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயி னும், வேலைநிறுத்தம் 100 சதவீதம் உறுதி யுடன் தொடர்ந்தது. பிரிட்டிஷ் - இந்திய அரசின் ரயில்வே நிர்வாகத்தை இப்போராட்டம் நிலைகுலைய வைத்தது. 30 நாட்கள் தொடர்ச்சி யாக இப்போராட்டம் நீடித்தது. இறுதியாக, ரயில்வே அமைச்சர் ஆஷப் அலி தொழி லாளர்களின் பல கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்த பின்னரே இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதேகாலத்தில் வடகிழக்கு ரயில்வே தொழிலாளர்களும் முழு அளவில் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டபோதிலும் இப்போராட்டமும் வெற்றியில் முடிந்தது. ரயில்வே தொழிற்சங்க இயக்க வரலாற்றில் இப்போராட்டங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நிகழ்வுகளாகும்.
போராட்டக் களத்தில் தபால் ஊழியர்கள்
இதேகாலத்தில் தபால் ஊழியர்களும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் இறங்கினர். இவர்களைத் தொடர்ந்து தந்தி மற்றும் ஆர்.எம்.எஸ். ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். இந்த வேலைநிறுத்தம் படிப்படியாக தேசம் தழுவிய அளவில் பரவியது. சென்னை, தில்லி, அசாம், ராஜபுத்தினா, மத்தியப்பிரதேசம், பீகார், சிந்து, பலுசிஸ்தான் என பல்வேறு மாநிலங்களில் இந்த வேலை நிறுத்தம் முழு அளவில் நடந்தது. பிரிட்டிஷ் அர சின் எச்சரிக்கை, மிரட்டல் எதுவும் எடுபட வில்லை. ஜவஹர்லால் நேரு கூட இப்போராட்டத்தை “தேச நலன் கருதி” வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தபால் ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிக்க மறுத்த தோடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் செயல்பட்ட அதன் மாநில அரசுகளின் நிர்வா கங்கள் இவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவின. ஆயினும், தபால் ஊழியர்களின் போராட்ட உறுதியை குலைக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கம் இவர்களின் போராட்டத் திற்கு முழுமையாகத் துணை நின்றது. கணிசமான மக்களை இப்போராட்டத்திற்கு ஆதரவாக அணி திரட்டியது. ஊழியர்களின் போராட்ட உறுதியை கண்டு மிரண்டு போன பிரிட்டிஷ் இந்திய அரசு நிர்வாகம் வேறு வழியின்றி இவர்களின் பல கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. இதனை நிறைவேற்ற அக்காலத்திலேயே 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதன்பிறகே தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றார்கள்.
பஞ்சாலை தொழிலாளர் போராட்டம்
இக்காலத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் பஞ்சாலைத் தொழிலாளர்களின் மகத்தான வேலைநிறுத்தப் போராட்டமாகும். பம்பாய், டாக்கா, நாக்பூர் பகுதிகளில் இதன் தாக்கம் மிக வலுவாக இருந்தது. இந்நகர் களின் பொருளாதாரம் பெருமளவு பஞ்சாலை களைச் சார்ந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இதேபோல நிலக்கரி சுரங்கத் தொழி லாளர்களும் இக்காலத்தில் ஒன்றுபட்டு நின்று வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். பீகார், மைசூர் (கோலார் தங்கவயல்), கல்கத்தா துறைமுக பகுதிகளில் வேலைநிறுத்தம் வலு வாக நடந்தது. இதர பல்வேறு துறைகளிலும் இக்காலத்தில் வலுவான போராட்டங்கள் நடந்தன.
தொழிற்சங்க எதிர்பார்ப்பை மிஞ்சிய போராட்டம்
தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் நடைபெற்ற காலத்திலேயே மத்திய தர வர்க்க ஊழியர்களும் ஏக காலத்தில் வேலைநிறுத்தத்தில் இறங்கிய நிகழ்வு தேசத்தை அதிர வைத்தது. இத்தகைய நிகழ்வு ஏக காலத்தில் நடைபெறும் என அன்றைய தொழிற்சங்க இயக்கம் எதிர்பார்க்கவில்லை என்பது உண்மை தான். ஆயினும், உழைப் பாளி மக்களின் வாழ்நிலை, ஊதியம் அரசு மற்றும் சுரண்டும் வர்க்க நிலைபாடுகளால் மிகவும் பாதிப்படைந்ததால் இத்தகைய பெரும் போராட்டங்கள் உருவாவதை எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
சுரண்டல் ஒழிப்பு - விடுதலைக்கான போரில் கம்யூனிஸ்ட் தலைமை
இங்கு மற்றொரு முக்கிய அம்சத்தையும் கவனிக்க வேண்டும். வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் தங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேச விடுதலைக் கான குரலையும் சேர்த்தே முழங்கினார்கள். இப்போராட்ட நிகழ்வுகள் அக்காலத்தில் மக்களி டையே தேச பக்த உணர்வை தட்டியெழுப்பியது.
சிறைக்கூடம் - சித்ரவதை எதிர்கொண்ட மன உறுதி
இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் கம்யூனிஸ்ட் இயக்கம் இப்போராட்டங்கள் மற்றும் ஆதரவு இயக்கங்கள் அனைத்திற்கும் தலைமை யேற்றது என்பது தான். லட்சோபலட்சம் உழைப்பாளி மக்களின் மகத்தான எழுச்சி நாய கனாக இக்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் உயர்ந்தது. இப்போராட்டங்களுக்கு தலைமை யேற்றதற்காக கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் களும், ஊழியர்களும் எதிர்கொண்ட அடக்கு முறைகள் சொல்லி மாளாது. காவல்நிலை யங்களும், சிறைச்சாலைகளும் சித்ரவதைக் கூடங்களாக மாறின. இவை எதுவும் கம்யூ னிஸ்ட்டுகளின் மன உறுதியை குலைக்க வில்லை. கம்யூனிஸ்ட் இயக்கமும் அதன் தலைமையிலான ஏஐடியுசி இயக்கமும் இந்தி யாவின் வர்க்கப்போராட்ட வரலாற்றில் இக்கா லத்தில் வீரம்செறிந்த அத்தியாயங்களை உருவாக்கின என்பதில் ஐயமில்லை.
தொழிற்சங்க இயக்கத்தை பிளவுபடுத்திய காங்கிரஸ்
மேலும், பிரிட்டிஷ் அரசின் மேலாண்மை யின் கீழ் செயல்பட்ட காங்கிரஸ் தலைமை யிலான மாநில அரசுகள் தொழிலாளி வர்க்கப்போராட்டங்களுக்கு எதிரான நிலை எடுத்தன என்பது வரலாற்று உண்மை. இந்திய முதலாளிகள் - பெருமுதலாளிகளுக்கு ஆதரவான தங்கள் வர்க்கத்தன்மையை அப்போதே காங்கிரஸ் வெளிப்படுத்தியது. முஸ்லீம் லீக் நிலைபாடும் வித்தியாசமானதாக இல்லை. 1946இல் பம்பாயில் செயல்பட்ட காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அப்போதைய தொழில் உறவு சட்டத்தை திருத்தி தொழிலாளி வர்க்கப்போராட்டங்களை நசுக்க முனைந்தது. அதனை பின்னுக்குத்தள்ளி கம்யூனிஸ்ட்டுகள் / ஏஐடியுசி தலைமையில் வர்க்கப்போராட்டங்களை எழுச்சியுடன் முன்னெடுத்தனர்.
வரலாற்றில் வீரமிக்க அத்தியாயம்
இதனால், ஆத்திரமடைந்த சுரண்டும் வர்க்கங்களும், காங்கிரஸ் தலைமையும் தொழிற்சங்க இயக்கத்தை பிளவுபடுத்தும் வேலையில் இறங்கியது. 1946இல் கூடிய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கம்யூனிஸ்ட்டுகளை காங்கிரஸ் தலைமை தாங்கும் அமைப்புகளிலிருந்து முழுமையாக வெளியேற்ற முடிவு செய்தது. அவ்வாறே வெளியேற்றவும் செய்தது. ஆனால், ஏஐடியுசி அமைப்பில் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமை யும், பிடிப்பும் வலுவாக இருந்ததால் அவர் களால் அதில் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, காங்கிரஸ் தலைவர்கள் ஏஐடியுசி யிலிருந்து வெளியேறி தனியாக ஐ.என்.டி.யு.சி. என்ற அமைப்பை உருவாக்கினர். இந்திய தொழிற்சங்க இயக்க வரலாற்றில் இத்தகைய முதல் பெரும் பிளவை காங்கிர சார் அரங்கேற்றினர். ஆயினும், வர்க்க உணர்வும், தொழிற்சங்க இயக்கமும், தொழி லாளர்களின் வாழ்நிலையோடு சம்பந்தப்பட்ட வையன்றோ?. எனவே, சுரண்டும் வர்க்கத் தாக்குதலால் பாதிப்படைந்த தொழிலாளர் களின் ஒன்றுபட்ட போராட்டங்களை அவர் களால் பிற்காலத்திலும் தடுக்க முடியவில்லை. ஏன்?, ஐ.என்.டி.யு.சி., பின்னால் திரண்டி ருந்த தொழிலாளர்களும் கூட ஏ.ஐ.டி.யு.சி. யுடன் இணைந்து ஒன்றுபட்ட போராட்டங் களை நடத்தினர் என்பது தான் வரலாறு. பொரு ளாதாரப் போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்போடு தேச விடுதலைப்போராட்டங் களாகவும் பரிணமித்தன என்பது தான் பிற்காலத்தில் சுரண்டும் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல; பிரிட்டிஷ் - ஏகாதிபத்தியத்திற்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது.