tamilnadu

img

அரசு மருத்துவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? - மரு. எஸ்.பெருமாள் பிள்ளை

அரசு மருத்துவர்களுக்கு தகுதிக் கேற்ற ஊதியம் வழங்க 2009ஆம்  ஆண்டில் அரசாணை அன்றைய முதல்வர் கலைஞரால் வெளியிடப்பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு மருத்துவர்களை பழி வாங்கியது.  அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையால் தமிழ்நாடு சுகாதாரத் துறையில் இன்றும் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வரு கிறது. ஒன்றிய அரசின் விருது தொடர்ந்து தக்க வைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், முந்தைய ஆட்சியாளர்களால் வீதியில் இறங்கி போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.  தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைப்ப தற்கான 2030 ஆம் ஆண்டுக்கான இலக்கை முன்னதாகவே அடைவதற்கு தங்களின் முழு  பங்களிப்பை வழங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை யிலான அரசு மருத்துவர்கள் அரசிட மிருந்து சிறப்புப் பரிசாக எதையும் எதிர்பார்க்க வில்லை.

பிற மாநிலங்களுக்கு இணையான ஊதி யத்தை தான் கேட்கிறோம். இதுவும், முந்தைய அதிமுக ஆட்சியில் ஏற்றுக்கொள்ளப் பட்டதுதான். இதை, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்று எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அந்த ஒப்பந்தத்தை அப்பட்ட மாக மீறியது மட்டுமல்ல ஒட்டுமொத்த மருத்துவ உலகத்தையே ஏமாற்றி விட்டார். நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் வைரஸ் தொற்று பரவ தொடங்கியதும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட போது, அரசு மருத்துவமனைகளும் அரசு மருத்துவர்கள் மக்களுக்கு வரப்பிர சாதமாக இருந்தனர். இதை யாருமே எளிதில் மறக்க முடியாது. வைரஸ் தோற்றுப் பரவல் தொடங்கியதிலிருந்து அரசு மருத்துவர்கள் மிகச் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நட வடிக்கைகளுக்காக அரசு போதிய நிதி ஒதுக்க வில்லையே என்று அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,”எவ்வளவு நிதி வேண்டுமானாலும் ஒதுக்குவதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் கூறி விட்டார். எனவே, நிதி ஒதுக்கீடு குறித்து கவ லைப்பட தேவையில்லை” என்றார். இருப்பி னும், அரசு மருத்துவர்களின் கோரிக்கையை கடைசி வரைக்கும் கிடப்பில் போட்டனர். 118  மருத்துவர்கள் அநியாயமாக தண்டிக்கப் பட்டனர். இதன் மிகப்பெரிய விலையாக போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் லட்சுமி  நாராயணன் உயிரையே தியாகம் செய்தார். இந்த சூழ்நிலையிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்து வரும் அரசு மருத்து வர்களுக்கு அரசாணை எண் 354 படி,  12  ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப் படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டு கிறோம். இதற்காக அரசுக்கு வெறும் 300 கோடி ரூபாய் மட்டுமே ஆண்டுக்கு தேவைப்படு கிறது. இதில் பெரும்பகுதியை முதலமைச்ச ரின் காப்பீட்டுத்திட்டம் மூலமாகவும் நிறை வேற்ற முடியும் என்பதையும் அரசிடம் பல முறை தெரிவித்து இருக்கிறோம்.

வரவேற்பும்-எதிர்பார்ப்பும்

ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் மாற்றமும், முன்னேற்றம் இல்லை என்பதால் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டம் அறிவித்திருந்தோம். பிறகு, பேச்சு வார்த்தைக்கு  அழைத்தது அரசு.  அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், வைரஸ் தொற்றால் உயிரிழந்த அரசு மருத்து வர்கள் 9 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார். அதேபோல், கார்ப்பஸ் பண்டு திட்டத்தை யும் நிறைவேற்றுகிறோம் என்று உறுதி அளித்து ள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு உண்மை யிலேயே எங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தி யது. பல ஆண்டு காலமாக போராடிக் கொண்டி ருக்கும் அரசு மருத்துவர்களின் கோரிக்கை யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் ஆகிய இருவரும் ஏற்றுக் கொண்டதை மனதார வரவேற்கிறோம்.  அதேநேரத்தில், பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட அனைத்தையும் மிக விரை வில் நிறைவேற்றி அரசு மருத்துவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.