கண்ணூர், ஏப்.5- “உனக்குள் நூற்றாண்டு களின் வரலாற்றை எழுதிய இத யங்களின் துடிப்புகள்...” கே.பி. ஏ.சி-யின் இந்த புகழ்பெற்ற பாடல், கண்ணூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக மைதானத்தில் ‘கே.வரதராஜன்’ நகரில், அமைக் கப்பட்டுள்ள ‘வரலாறு ஒரு போரா ட்ட ஆயுதம்’ என்கிற கண்காட்சி அரங்கிற்கு வரும்போது பாடப் படும். ‘துடிப்பு உங்களின் நூற் றாண்டு வரலாற்றை எழுதிய இத யங்கள்..’ கேபிஏசியின் பிரபல மான இந்த பாடலை எவரும் ஒரு முறையேனும் பாடாமல் இருக்க முடியாது. கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக திடலில் கே. வரதராஜன் நகரில் அமைக்கப் பட்டுள்ள ‘வரலாறு ஒரு போராட்ட ஆயுதம்’ என்கிற தலைப்பிலான வரலாற்றுக் கண்காட்சியும் அது போன்ற உணர்வை ஏற்படுத்து கிறது.
சுதந்திரத்திற்கான பய ணத்தின் போது இரத்தம் தோய்ந்த போராட்டங்களையும் எண்ணற்ற ஓவியங்களையும் சிற்பங்களை யும் நினைவூட்டுகிறது இந்த கண்காட்சி. கையூர் தோழர்கள் தூக்கு மேடைக்கு முன் கண்ணீர் சிந்தாமல் முழக்கமிடுவது, புன்ன புரா-வயலார் போராளிகள் தீ உமி ழும் துப்பாக்கியின் முன் வாள் ஏந்தி சண்டையிடுவது, கரிவெள் ளூர் போராட்டக் காட்சிகளும் நிறு வப்பட்டுள்ளன. ஜாலியன் வாலாபாக் படு கொலை, வேகன் சோகம், தமிழ் நாட்டில் நடந்த கீழ்வெண்மணி படு கொலை, 1921 மலபார் கிளர்ச்சி, பினராயி-பரப்பிரம் மாநாடு, தலச்சேரி வகுப்புவாத கல வரத்தின் போது ஏ.கே.ஜி போலீஸ் ஜீப்பின் மேல் ஏறிநின்று நடத்திய உரை.. அனைத்தும் மறக்க முடி யாத நிகழ்வுகளாக காட்சிப்படுத் தப்பட்டுள்ளன. மார்க்ஸ், ஏங் கெல்ஸ், லெனின், மகாத்மா காந்தி, கிருஷ்ண பிள்ளை, ஏ.கே.ஜி, சி.எச்.கணாரன், ஸ்ரீநாரா யண குரு, அய்யன்காளி ஆகியோ ரின் சிற்பங்களும் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கொடி யேரி பாலகிருஷ்ணன் கண்காட்சி யை பார்வையிட்டார். மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி, மாவட்டச் செயலர் எம்.வி.ஜெய ராஜன், மாநிலக் குழு உறுப்பி னர்கள் பி.ஜெயராஜன், டி.வி. ராஜேஷ், கண்காட்சிக் குழு அ மைப்பாளர் பி.ஹரீந்திரன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். வரலாறு ஒரு ஆயுதம் என்ற கண்காட்சியை மாணவர்கள், இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்கிறார் கதாசிரியர் டி பத்மநாபன். கண்காட்சியைப் பார்த்த பிறகு, பார்வையாளர் புத்தகத்தில் கண்காட்சி மிகவும் நன்றாக இருந்தது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று எழுதினார்.