tamilnadu

img

2050இல் நீங்கள் என்ன சாப்பிடப் போகிறீர்கள்? - சிதம்பரம் இரவிச்சந்திரன்

சூழல் சீரழிவு பூமியை வேட்டையாடிக் கொண்டிருக்கும் நிலையில் 2050இல் உங்கள் சாப்பாட்டு மேசையில் நீங்கள் சாப்பிடப் போகும் உணவு வகைகள் பற்றி லண்டன் கியூ (Kew) ராயல் தாவரவியல் பூங்கா ஆய்வாளர் கள் சிலவற்றை கணித்துள்ளனர். 2050இல் பொய் வாழைப்பழம் (false banana) அல்லது பாண்ட னஸ் (Pandanus) பழம் போன்ற சிலவற்றை மட்டுமே நீங்கள் உங்கள் காலை உணவாக எடுத்துக்கொள்வீர்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

பதினைந்தில் இருந்து 90%

உலகளவில் பெருமளவில் பயிரிடப்படும் 15 வகை பயிர்களில் இருந்தே இன்று நமக்குத் தேவையான 90% சத்துக்களையும் நாம் பெறு கிறோம். காலநிலை மாற்றம், புவி வெப்ப உயர் வினால் வறட்சி, பெருமழை, பெருவெள்ளப் பெருக்கு, கடும் கோடை, வெப்ப அலை, காட்டுத் தீ, உள்நாட்டுப்போர் போன்ற பல காரணங்களால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

கனவாகும் உணவு

இதை சமாளிக்க வருங்காலத்தில் மனிதர்களின் பசி போக்க உதவும் பயிர்களைப் பற்றிய ஆய்வுகளை விஞ் ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இன்றுள்ள நிலையில் இலட்சக்கணக்கான ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இரவு உணவு இல்லாமல் உறங்கச் செல்கின்றனர். பல மில்லியன் மக்கள் சத்துக்குறைபாடுகளால் நோய்வாய்ப் பட்டு முன்கூட்டியே உயிரிழக்கின்றனர். உயரும் வெப்ப நிலையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவுப் பற்றாக் குறை ஏற்பட்டு உணவு விலை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. சாமானியர்களுக்கு வயிறார உணவு என்பது எட்டாக் கனியாகிவிட்டது. விளைவிக்கப்படும் பயிர்களில் பன்மயத்தன்மையைக் கொண்டுவருவதே இதற்கு சிறந்த தீர்வு என்று ஆய்வாளர் கள் நம்புகின்றனர். இயற்கையின் உயிர்ப்பன்மயத்தன்மை விதிகளைக் கடைப்பிடித்து மாறும் காலநிலைக்கு ஏற்றவாறு பயிரிடும் பயிர்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இதை சமாளிக்கலாம் என்று கியூ ஆய்வாளர் டாக்டர் சாம் பிரினண் கூறுகிறார். பூமியில் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கேற்ப பல பயிர்கள் பயிரிடப்படுகின்றன. வருங்காலத்தில் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாறப்போகும் உணவு சிக்கலைத் தீர்க்க இப்போதே இது பற்றிய ஆய்வு முடிவுகள் உதவும் என்கிறார் அவர். உலகில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட உணவுப்பயிர்கள் உள்ளன. ஆனால் இவற்றில் 417 பயிர்கள் மட்டுமே பரவலாகப் பயிரிடப்படுகின்றன. பயன்படுத்தப்படு கின்றன. இதில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று ஆய்வாளர் கள் கூறுகின்றனர்.

பாண்டனஸ் பழம்

பசிபிக் தீவுகள் முதல் பிலிப்பைன்ஸ் வரை மிகக் குறைவான பரப்பில் மட்டுமே பயிரிடப்படும் இது ஒரு பழமரம். தென்கிழக்கு ஆசியா முழுவதும் இதன் இலைகள் உணவிற்கு இனிப்புச் சுவையூட்ட அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன. அன்னாசி போலக் காட்சி தரும் இதன் பழத்தை அப்படியே சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். இந்த மரம் சவால் நிறைந்த பருவநிலை, வறட்சி, சூறைக்காற்று மற்றும் உவர்த் தன்மை போன்றவற்றைத் தாக்குப்பிடித்து வளரக்கூடியது என்று பூங்காவின் மற்றொரு விஞ்ஞானி டாக்டர்  மேரிபிள் சோட்டோ கானஸ் (Dr Marybel Soto Gonez) கூறுகிறார். சுவை மிகுந்த இதன் பழம் நாளைய உலகின் பசி போக்க உகந்தது என்று அவர் மேலும் கூறுகிறார். கலாச்சாரத்திற்கேற்ற, சத்துகள் நிறைந்த, உலகெங்கும் சிக்கலான காலநிலையில் விளைச்சல் தரும் உணவுகளை பயிரிடவேண்டும். பாண்டனஸ் இதற்கேற்றது. இது இன்னும் அதிக பரப்பில் பயிரிடப்படவேண்டும் என்று மேரிபிள் கருதுகிறார். 

பீன்ஸ்

வருங்கால உலகின் மற்றொரு உணவு இது. இதில் உள்ள பல ரகங்கள் விலை மலிவானவை. புரதங்கள் நிறைந்தவை. வைட்டமின் பி சத்துகள் நிரம்பியவை. கடலோரப்பகுதி முதல் மலைச்சரிவுகள் வரை இதை சுலபமாக வளர்க்கலாம். உலகில் 20,000 பீன்ஸ் வகை யைச் சேர்ந்த இருவித்திலைப் பயிர்கள் உள்ளன. ஆனால் இதில் ஒரு நூறு வகைகளை மட்டுமே மனிதர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆப்பிரிக்காவின் பீன்ஸ்

ஆப்பிரிக்காவில் போட்ஸ்வானா, நமீபியா, தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே பயிரி டப்படும் பீன்ஸ் டைலோஸ்மா எஸ்குலாந்தம்   (Tylosema esculentum). இது சோளத்துடன் சேர்க்கப்பட்டு அல்லது தனியாக வேகவைக்கப்பட்டு கோக்கோ போன்ற பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. பூமியில் காணப்படும் பீன்ஸ் வகைகள் அனைத்தும் உண்ணத் தகுதியானவை அல்ல. நாளைய உலகின் பசியைப் போக்க உதவும் மற்ற ரகங்களைப் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

காட்டுப் பயிறு வகைகள்

புல் வகையைச் சேர்ந்த இவற்றில் பல ரகங்கள் காணப்படுகின்றன. புதிய உணவிற்கான நம்பிக்கையை உலகெங்கும் வளரும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயிறு தாவரங்கள் நம்பிக்கையளிக்கின்றன. ஆப்பிரிக்காவில் பானங்கள், மற்ற உணவுகள் தயாரிக்க உதவும் போனியோ (Fonio) இதில் ஒன்று. இதன் அறிவியல் பெயர் டிஜிட்டேரியா எக்ஸிலிஸ் (Digitaria exilis). சில உள்ளூர்ப் பிரதேசங் களில் மட்டும் வளர்க்கப்படும் இப்பயிர் எத்தகைய கால நிலையையும் சமாளித்து வளரும் இயல்புடையது. மேற்காப் பிரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் இதில் இரும்பு, கால்சியம், உயிர்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

பொய் வாழை

வாழையின் நெருங்கிய சொந்தமான இது எத்தியோப் பியாவின் ஒரு பகுதியில் மட்டுமே உட்கொள்ளப்படுகிறது. வாழைப்பழம் போலத் தோன்றும் இதன் பழம் உண்ணக் கூடியது அல்ல. ஆனால் இதன் வேர் மற்றும் தண்டில் அதிகமாக இருக்கும் ஸ்டார்ச் நொதிக்க வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதில் இருந்து ரொட்டி மற்றும் இதர உணவுவகைகள் தயாரிக்கப்படுகின்றன. வெப்ப மடைந்துவரும் உலகில் நூறு மில்லியனிற்கும் அதிகமான மக்களுக்கு இந்த வாழை ரகம் வருங்கால உணவாகப் பயன்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

விஞ்ஞானிகள் நினைவூட்டல்

ராயல் பூங்கா விஞ்ஞானிகளின் இப்பரிந்துரைகள் இன்றைய நிலையில் 2050இல் மனிதனின் வயிற்றுப்பசியை போக்க உதவும் உணவு வகைகள் சில மட்டுமே இவை என்பதை மறந்துவிடக்கூடாது. தடுக்க இயலாமல் போய்க் கொண்டிருக்கும் சூழல் சீரழிவு வரும் நாட்களில் இன்னும் மோசமானால் இவை கூட மனிதனுக்குக் கிடைக்காமல் போகும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.