tamilnadu

img

தமிழகத்தில் புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள்..... மாணவர், ஆசிரியர் சிரமத்திற்கு காரணம் ஏஐசிடிஇ-தான் : உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

மதுரை:
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கு யார் காரணம்? யார் அனுமதி வழங்கியது?  மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு ஏஐஇசிடிதான் காரணம் என நீதிபதிகள் கடிந்துகொண்டனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கே.எம்.கார்த்திக் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.  அதில்,  “ கடந்த 17.07. 20 அன்று உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரசு தனியார் கல்லூரிகள் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது . மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூல் செய்த போதிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முறைப்படி ஊதியம் வழங்கவில்லை .கொரோனா  ஊரடங்கு காலத்தில் சில மாதங்கள் ஊதியம் கொடுத்து இருந்தாலும்,  பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை வழங்கவில்லை. அண்ணா பல்கலைக்கழ கத்தில் இதுகுறித்த புகார்களை விசாரிக்க ஒரு இணையதள முகவரி வழங்கப்பட்டுள்ளது .ஆனால் அதில் புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 விண்ணப்பங்களை பெற்றுள்ளன .  461 பொறியியல் கல்லூரிகளுக்காக இந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.   இதில் 90 சதவீத கல்லூரிகள் தனியார் கல்லூரிகள்.கொரோனா காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான ஊதியம்  தற்போது முறையாக வழங்கப்படவில்லை. தனியார் பொறியியல் கல்லூரி  மாணவர்களின்  வாழ்க்கைமிகுந்த சோகத்தில் உள்ளது. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில்  ஆசிரியர்களை  கல்லூரிநிர்வாகம் பல மாதங்களுக்கு முன்பே பணிநீக்கம் செய்து விட்டது . 

அவர்கள் தற்போது வாழ்வாதாரத்திற்காக கடை வைத்தும், வியாபாரி ஆகவும்  தங்கள்வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள தனியார், சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு  கொரேனா காலத்தில்  உரிய ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா   என்பதை  உறுதிசெய்ய வேண்டும்.  அதுவரை  தற்போதைய பொறியியல் சேர்க்கைக்கான,  கலந்தாய்வை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள்  கிருபாகரன், புகழேந்திஅமர்வு முன் வியாழனன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பல மாதங்களாக ஊதியமின்றி  சிரமத்தில் உள்ளனர். பலர் பிரியாணி கடைகளிலும் உணவகங்களிலும் பல்வேறு வேலைகளில் பணியாற்றி வருகின்றனர்.  அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறினார்.அப்போது  நீதிபதிகள், “தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கு யார் காரணம்? யார் அனுமதி வழங்கியது?  மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு ஏஐஇசிடிஇ-தான் காரணம்.

தற்போது தமிழகத்தில் பொறியாளர்களை உருவாக்குவதில்லை. பட்டதாரிகள் உருவாகின்றனர். அதனால்தான் பல்வேறு சிக்கல்கள்ஏற்படுகிறது எனக் கூறிய நீதிபதிகள், இதுபோன்ற பிரச்சனைகளைக் களைய வேண்டும்.தேவைக்கேற்ப கல்லூரிகளைத் தொடங்க வேண்டும். இந்த வழக்கில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள்  சங்கத்தையும்  எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.