அரசியல் உள்நோக்கத்தோடு அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் முத்துசாமி கண்டனம்
சென்னை, மே 17- அரசியல் உள்நோக்கத்தோடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்து வதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படை யாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறு வனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்த ரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது. இந்த சோதனைகளின் போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்த விதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியா யப்படுத்துவதற்காக, அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறு வன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வரு கிறது. இதன் தொடர்ச்சியாக, வெள்ளியன்று டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடு களில் சோதனைகளை அமலாக்கத் துறை மேற்கொண் டுள்ளது. இந்த சோதனைகளின் போதும், எந்தவிதமான ஆதா ரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டா யப்படுத்தியும் வருகிறது. பல வழக்குகளில், உச்சநீதி மன்றம் விதித்துள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து மீறி, இவ்வாறு அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அர சியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அர சின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.