தில்லி மதுபான கொள்கை பிரச்சனையில் அமலாக்க த்துறையால் 2023 பிப்ரவரியில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது! 2024 மார்ச்சில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி தலைவரும் தெலுங்கானா முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா இதே வழக்கில் கைது! 2024 மார்ச் 21 இரவு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! இந்த பிரச்சனையில் அர பிந்தோ பார்மா எனும் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அமலாக்கத்துறையின் குற்றச் சாட்டு. இந்த நிறுவனத்தின் இயக்குநர் சரத் சந்திர ரெட்டி 11.11.2022 அன்று கைது செய்யப் படுகிறார். 4 நாட்கள் கழித்து 15.11.2022 அன்று அரபிந்தோ நிறுவனம் ரூ. 5 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்குகிறது. 21.11.2022 அன்று பா.ஜ.க. விற்கு இந்த 5 கோடி போய்ச் சேருகிறது. ஜூன் மாதம் 2023ல் சரத் ரெட்டி அப்ரூவராக மாறுகிறார். ஆம் ஆத்மி மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கு எதிராக சாட்சியம் சொல்கிறார். நவம்பர் 2023ல் அரபிந்தோ ரூ.25 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு நன்கொடை தருகிறது. மேலும் ரூ.4.5 கோடி அரபிந்தோ பா.ஜ.க. வுக்கு தருகிறது. ஆக மொத்தம் அரபிந்தோ மூலம் பா.ஜ.க. பெற்றது ரூ.34.5 கோடி. ஒருபுறம் கார்ப்பரேட் ஆட்கள் மீது அமலாக்கத்துறையை ஏவி கைது செய்வது; பின்னர் அவர் களை பிளாக் மெயில் செய்து பா.ஜ.க.வுக்கு பணம் பறித்து கொள்வது; அவர்களின் சாட்சி யங்களைப் பயன்படுத்தி தேர்தல் காலத்தில் எதிர்கட்சி தலைவர் களை கைது செய்து தன்னை “சுத்த சுயபிரகாசமாக” காட்டிக் கொள்வது. என்னே பா.ஜ.க.வின் நரித்தனம்! மணீஷ் சிசோடியா/ கவிதா/ அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் குற்றம் செய்தார்கள் என வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் இந்த பிரச்சனை யில் பிளாக் மெயில் மூலம் ரூ.34.5 கோடி “லஞ்சம்” பெற்ற பா.ஜ.க. அதனைவிட பெரிய குற்றவாளி அல்லவா? புலனாய்வு அமைப்புகள் பா.ஜ.க. தலைவர்களையும் அல்லவா கைது செய்ய வேண்டும்? அது நடக்காது! ஏவப்படும் அம்பு வில்லையோ அல்லது அந்த வில்லை இயக்குபவ னையோ கேள்வி கேட்குமா? “நாய்” தனது எஜமானனை கடிக்குமா? ஆனால் மக்கள் கவனித்து கொண்டுதான் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டுவர் இந்த தேர்தலில்!