திருச்சூர், ஜன.25- கம்யூனிஸ்ட் அறிஞரும், கேரளாவின் முதலாவது முதல்வருமான, இ.எம்.எஸ்.சின் இளைய மகன், எஸ்.சசி (67) மும்பையில் கால மானார். மகள் அபர்ணாவின் வீட்டில் அவர் வசித்து வந்தார். ஜன.24 திங்களன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார். தேசாபிமானி முன்னாள் தலைமை கணக்கு மேலாளராக இருந்தார். திருவனந்த புரம் பொது மேலாளர் அலுவலகத்தை மையமாக கொண்டு பணியாற்றி வந்தார். கேரளாவில் உள்ள தேசாபிமானியின் அனைத்து பிரிவுகளுக்கும் அவர் பொறுப் பாளராக இருந்தார். 2000 ஆம் ஆண்டு திருச்சூரில் தேசாபிமானி பிரிவைத் தொடங்கிய பிறகு, திருச்சூருக்கு குடி யிருப்பை மாற்றிக் கொண்டார். இ.எம்.எஸ் உடன் தில்லியில் நீண்ட காலம் தங்கியிருந் தார். அவர் தேசாபிமானியில் உள்ள சிபிஎம் நிர்வாகக் கிளையில் உறுப்பினராக இருந்தார். அவரது தாயார் மறைந்த ஆர்யா அந்தர்ஜன். மனைவி கே.எஸ்.கிரிஜா, தேசாபி மானியின் முன்னாள் துணை மேலாளர். குழந்தைகள்: அனுபமா சசி (லாண்டிஸ் ஜிஒய்ஆர், தில்லி), அபர்ணா சசி (டிசிஎஸ், மும்பை). மருமகன்கள்: ஏஎம் ஜிகிஷ் (தி இந்து, பிசினஸ் லைன் துணை ஆசிரியர், தில்லி), ராஜேஷ் ஜே வர்மா (கோத்ரேஜ் கம்பெனி மெக்கானிக்கல் இன்ஜினியர், மும்பை). உடன்பிறப்புகள்: டாக்டர் இ.எம்.மாலதி, மறைந்த இ.எம்.ஸ்ரீதரன், இ.எம்.ராதா (மகளிர் ஆணைய உறுப்பினர்).