tamilnadu

img

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சிறப்பு அலுவலரை நியமித்து திறக்க வேண்டும்

சென்னை, ஜூலை 28 - கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சிறப்பு அலுவலரை நியமித்து திறக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழிக்கு பொதுப்பள்ளிக் கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பியுள்ள கடிதத்தின் சுருக்கம் வருமாறு: அரசுப் பள்ளி வளாகத்தில் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்து,  அதை உரிய முறையில் தலைமையா சிரியர் கையாளவில்லை என்றால் உடனடியாக அந்தத் தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். விளக்கம் கேட்டு, அவர் தரும் பதிலில் திருப்தியில்லை என்றால் இடைநீக்கம் செய்து விசாரிக்கப்படுவார். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து கல்வித்துறை மற்றும் காவல்துறை இரண்டும் விசாரணை மேற்கொள் ளும். அதன்பின்னர், இறுதி அறிக்கை  அடிப்படையில் அவர் பணியில் தொடர்வதா அல்லது நீக்குவதா? என முடிவு எடுக்கப்படும். இதேநிலைதான் பள்ளியைக் கண்காணிக்கும் அலுவலர்களுக்கும், மாவட்டக் கல்வி அலுவலர் தொடங்கி இயக்குநர் வரைக்கும் பின்பற்றப்படும். கும்பகோணம் பள்ளி சம்பவத்தில் ஆசிரியர் முதல் தொடக்கக் கல்வி இயக்குநர் வரை இடைநீக்கம் செய்யப்பட்டனர். பள்ளி நிர்வாகி கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

தனியார் பள்ளியை நடத்தும் தனியார் நிர்வாகம் அரசின் முகவர்  மட்டுமே. அந்நிர் வாகம் “பள்ளியை நிர்வகிக்கும் அரசின் முகவர்” என்றே அழைக்கப்படும். தனியார் பள்ளியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்து, நிர்வாகம் அதைச் சரியாகக் கையாள வில்லை என்றால், அது தரும் விளக்கம் திருப்தி அளிக்காத போது  முகவரை இடைநீக்கம் செய்து விசார ணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணைகளுக்கு பிறகு பள்ளி நிர்வா கத்தை மீண்டும் அதே முகவரிடம் தருவதா? அல்லது அரசே ஏற்று நடத்து வதா என்ற முடிவிற்கு வரமுடியும்.  இதில் அரசுப் பள்ளிக்கு ஒரு நீதி, தனியார் பள்ளிக்கு ஒரு நீதி என்று பாரபட்சம் காட்ட இயலாது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மாணவி உயிரிழந்தார் என்று காவல் துறையின்  முதல் தகவல் அறிக்கைப் பதிவு கூறுகிறது. இந்த வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்படும்போது தற்கொலை யைத் தூண்டுவது மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் போதைப் பொருள் தரப்பட்டுள்ளது என்றால் அது மிகவும் ஆபத்தானது. பல மாணவர்களின் வாழ்க்கையை  அழித்திடும் அதிர்ச்சி தரும் செயல் பாடு. பள்ளி நிர்வாகம் எவ்வாறு இத்தகைய செயல்கள் நடப்பதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. பள்ளி நிர்வாகத் தரப்பில் குழந்தை, மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடப்பதாக தனக்கு தகவல்  வந்ததாகவும், உடனே அங்குச் சென்று குழந்தையைக் காப்பாற்றி விடலாம் என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

குழந்தை கீழே விழுந்ததை யாரும்  பார்க்கவில்லை என்பதை நிர்வாகத் தின் வார்த்தைகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படி என்றால் குழந்தை தரையிலேயே தவறி  விழுந்ததா? அல்லது மூன்று மாடியில்,  எந்த மாடியில் இருந்து விழுந்தது? என்று நிர்வாகத்திற்குத் தெரிய வாய்ப்பு இல்லை. இந்தச் சூழலில், தகவல் கிடைத்ததும் முதலில் ஆம்புலன்சுக்குத்தானே தகவல் தந்திருக்க வேண்டும்? மாறாக, மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறுவது எப்படி சரியான அணுகு முறையாக இருக்க முடியும்? ஆம் புலன்ஸ், மருத்துவர், பெற்றோர், காவல்துறை என்று யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், பள்ளி  நிர்வாகி நேராக வந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றதற்கான காரணம் என்ன? இது பலவகையான சந்தேகங்களைக் கிளப்புகிறது. மருத்துவமனைக்கு குழந்தை இறந்தே அழைத்து வரப்பட்டது என்று மருத்துவர்கள் அறிவித்ததும், பெற்றோருக்குத் தகவல் தந்து, நடந்த சம்பவத்தை விளக்கி இருக்க வேண்டும். மாறாக, உடலை மருத்து வமனையில் ஒப்படைத்து விட்டுச் சென்றிருப்பது நியாயமான அணுகுமுறையா? மிகப்பெரும் துன்புறுத்தல் காரணமாக குழந்தை யின் உயிர் பிரிந்துள்ளது.  குழந்தை வன்முறைக்கு உள்ளாகி உள்ளதை உணர முடிகிறது.

இத்தகைய சூழலில், அந்தப்பள்ளி யில் பயிலும் பல ஆயிரம் குழந்தை களுக்கு என்ன பாதுகாப்பு? பள்ளியில் உரிமம் பெறாமல் விடுதி நடத்தியது குறித்து முழு அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்று மாநில மற்றும் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையங்கள் தெரிவித்துள்ளன. விடுதி நடத்துவதில் பள்ளி நிர்வாகம் சட்டப்படி நடந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகிறது.  அரசுப் பள்ளிகளில் நடந்தால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ, அதேபோன்று, விசாரணை முடியும் வரை பள்ளியை நடத்தும் அரசின் முகவரான தனியார் நிர்வாகத்தை, இடைநீக்கம் செய்ய வேண்டும். அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க வேறு பள்ளிகளில் சேர்க்கும் வாய்ப்பு இல்லை என்றால்,  சம்பந்தப்பட்ட பள்ளியை தற்காலிக மாக நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்து நடத்த வேண்டும்.  விசாரணை முடியும் வரை பள்ளி  வளாகத்திற்குள் தனியார் நிர்வா கம் நுழையக் கூடாது. விசார ணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஆசிரியர்களுக்குப் பதிலாக வேறு ஆசிரியர்களை நியமித்துப் பாடத்தை நடத்த வேண்டும். பள்ளியை தற்காலிகமாக அரசு ஏற்று நடத்தாமல், மீண்டும் அதே  முகவரிடம் ஒப்படைப்பது நியாய மற்ற அணுகுமுறையாகும். பள்ளியைச் சுற்றி வாழும் மக்களின் சமூகப் பிரிவுகள் குறித்து, உளவுப் பிரிவு அறிக்கையை மேற்கோள் காட்டி பத்திரிகையில் செய்திகள் வெளிவந்துள்ளது கவலையை அளிக்கிறது. அரசிற்குத் தர வேண்டிய அறிக்கையை, பத்திரிகைக்குத் தந்தது அல்லது கசியவிட்டது ஏன்? அனைத்துக் கோணத்திலும் ஆராய்ந்து, மாண வர் கல்வி பாதிக்கக்கூடாது என்ற உண்மைக் காரணத்திற்காகப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டி யிருந்தால், சிறப்பு அலுவலரை நியமித்து பள்ளியை நடத்துவதே சிறந்தது. முதலமைச்சர் கவனத் திற்கு அனைத்துத் தரவுகளையும் அமைச்சர் எடுத்துச் சென்று, சட்டத்திற்கு உட்பட்டு ஒருதலைச் சார் பின்றி நியாயமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.