tamilnadu

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஓய்வூதியர் சங்க மாநில பேரவை வலியுறுத்தல்

திருவாரூர், அக்.17 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை புதனன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. மாநில பேரவைக்கு மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவரும், அரசு ஊழியர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளருமான வெ.சோமசுந்தரம் வரவேற்றார். முன்னதாக சங்கத்தின் கொடியை மாநில பொது செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி ஏற்றினார். அகில இந்திய சங்கத்தின் கொடியை அமைப்பின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் ஏற்றினார். பேரவையில் பங்கேற்ற  கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை தொடக்க உரையாற்றினார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர்  வை.செல்வராஜ் வாழ்த்துரை வழங்கி னார். பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் ந.ஜெயச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் வி.முனியன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.புஷ்ப நாதன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன் நன்றி கூறி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சா.டானியல் ஜெய்சிங்  நிறைவுரையாற்றினார்.

நவ.26 இல் சென்னையில் தர்ணா

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதில் ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற காவலர்கள், வன காவலர்கள், பட்டு வளர்ச்சி ஊழியர்கள் அனை வருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். காப்பீடு திட்ட நீண்ட கால குறைபாடுகளை நீக்கிட, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கருவூல ஆணையர் அளித்த உறுதிமொழியின்படி ட்ரேக்கிங் சிஸ்டத்தை அமல்படுத்திட வேண்டும். முதல்வர் அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நவம்பர் 26 அன்று, தலைநகர் சென்னையில் மாபெரும் தர்ணா நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.