tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்குக!

சென்னை, மார்ச் 22 - தமிழ்நாட்டில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7 ஆயிரத்து 850  வழங்க வேண்டுமென்று ஓய்வூதி யர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்டு தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7 ஆயிரத்து 850 வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் செவ்வாயன்று (மார்ச் 21) சென்னையில் கோரிக்கை மாநில மாநாட்டை நடத்தியது. அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் நெ.இல.சீதரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர்  நாகை மாலி மாநாட்டை துவக்கி  வைத்து பேசுகையில், “எதிர்க்கட்சி யாக உள்ளபோது கோரிக்கைகளை ஆதரிப்பதும், ஆளும் கட்சியானதும்  நிறைவேற்ற மறுப்பதும் சரியல்ல. ஊழியர் நலனில் அக்கரை செலுத்தா மல், ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையையே மாநில அரசு அமல்படுத்துகிறது” என்றார். மக்களின் பிரச்சனைகளை பேசுவதற்கு சட்டமன்றத்தில் போதிய  நேரம் ஒதுக்குவதில்லை என்று  ஆதங்கப்பட்ட அவர், தொகுப்பூதி யத்தில் பணியாற்றுவோரின் குறைந் தபட்ச ஓய்வூதியத்தை மாற்றி அமைக்கவும், குடும்ப ஓய்வூதியம் வழங்கவும் சட்டமன்றத்தில் எழுப்பு வோம் என்றும் கூறினார்.

மாநாட்டை நிறைவு செய்து பேசிய  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  தலைவர் மு. அன்பரசு, “தமிழ்நாடு  அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள், ஓய்வூதியர்களிட மிருந்து அகவிலைப்படி, சரண்  விடுப்பு போன்றவற்றை பறித்தும், காலிப் பணியிடங்களை நிரப்பாமலும், வருவாயை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். அடுத்த 2 பட்ஜெட்டு களில் பற்றாக்குறையே இருக்காது என்றால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வயிற்றில் மேலும் அடிக்கப் போகிறார்கள் என்று பொருள்” என்றார். சத்துணவுத் திட்டத்திலுள்ள 59ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளனர். காலை சிற்றுண்டி திட்டத்தை போன்று சத்துணவு திட்டத்தையும் தனியாரிடம் கொடுக்க திட்டமிடுகின்றனர். நிரந்தர ஊழியர்களே இல்லாத நிலையை உருவாக்க அடுத்தடுத்து அரசாணைகளை வெளியிட்டு வருகின்றனர். எம்ஆர்பி செவிலி யர்கள் 10ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளனர். கால்நடைத் துறையில் 15 வருடம் பணியாற்றிய சிவில்  சர்ஜனை அத்துக்கூலியாக மாற்றி யுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

வேலைநிறுத்தம்-கோட்டை முற்றுகை

மின்சாரம், போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள், அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க முடியும்; உரிமைகளையும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். 20 ஆண்டுகளாக பறிக்கப் பட்ட உரிமைகளை மீட்டெடுக்க 2023ம் ஆண்டை வாழ்வாதார உரிமை களை மீட்கும் ஆண்டாக வரையறுத் துள்ளோம். இதன்படி, மார்ச் 28 அன்று ஒருநாள் வேலை நிறுத்தமும், ஏப்.19 அன்று கோட்டையை முற்று கையிடும் போராட்டமும் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தீர்மானம் இதனைத் தொடர்ந்து சத்துணவு,  அங்கன்வாடி, வருவாய் கிராம  ஊழியர்கள், உள்ளாட்சி எழுத்தர் கள், ஊராட்சி உதவியாளர்கள், வனக்காவலர்கள், நெடுஞ்சாலை துறை, பட்டு வளர்ச்சித்துறைத் ஊழியர்கள் என அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்க  வேண்டும். இதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரி லேயே வெளியிட வேண்டும் என்ற  தீர்மானத்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி முன்மொழிந்தார். இந்த மாநாட்டில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க பொருளாளர் சோமசுந்தரம், தமிழ் நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்  சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.பாரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்  சங்கத் தலைவர் ஆர். கலா, தமிழ்நாடு  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கப் பொருளாளர் தேவ மணி, ஓய்வூதியர் சங்கத்தின் பொரு ளாளர் ந. ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் என்.அரங்கநாதன் உள்ளிட்டோர் பேசினர்.