tamilnadu

img

நெசவாளர் அடையாள அட்டையில் நலத்திட்டங்களை தமிழில் வழங்க வேண்டும்

கும்பகோணம், அக்.27- கைத்தறி சம்மேளன மாநில குழு  கூட்டம் கும்பகோணம் சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சம்மேளனத் தலை வர் ஆர்.சிங்காரவேலு தலைமை வகித்  தார். செயலாளர் இ.முத்துக்குமார், பொருளாளர் ஜீவா, தஞ்சை மாவட்ட சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால், கைத்தறி சம்மேளன பொறுப்பாளர்கள் என்.பி.நாகேந்தி ரன், எஸ்.ஜே.சுப்புராமன், கே.ஆர்.சந்திரன் உள்ளிட்ட கோவை, மதுரை,  திருப்பூர், காஞ்சிபுரம், அரியலூர் உள்  ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாகி களும் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கைத்தறி நெசவாளர் களுக்கு மழை கால நிவாரணம்  ஆண்டிற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண் டும் பென்ஷன் காலதாமதம் இல்லா மல் மாதாமாதம் வழங்க வேண்டும், பென்ஷன் தொகை ரூ.3 ஆயிரம் உயர்த்தி  வழங்க வேண்டும். கைத்தறி நெசவா ளர் அடையாள அட்டையில் சொல்  லப்பட்டிருக்கிற அரசு நலத்திட்டங் களை தமிழில் மொழி பெயர்த்து உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கைத்தறி நெச வாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்ட மகாத்மா காந்தி புங்கர் பீமா திட்டத்தின் கீழ் இறந்த பிறகு குடும்பத்  திற்கு ரூ.1 லட்சம் உயர்த்தி வழங்க  வேண்டும். கைத்தறிக்கு ஜிஎஸ்டி வரி களை முழுமையாக நீக்கம் செய்ய  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மாநாடு மேலும் கைத்தறி சம்மேளன மாநில மாநாடு 2023 மார்ச் மாதத்தில் காஞ்சி புரத்தில் நடத்துவது எனவும் கன்னியா குமரியில் நடைபெறும் சிஐடியு மாநில மாநாட்டிற்கு அனைத்து நெசவா ளர்களும் கலந்து கொள்வது எனவும்  முடிவெடுக்கப்பட்டது.