திருநெல்வேலி, ஜூலை 14- நெல்லை மாவட்டம் குற்றா லத்தில் ஜூலை 13,14 ஆகிய 2 நாட்கள் சிஐடியு மாவட்ட மாநாடு நடை பெற்றது. முதல் நாள் மாநாடு கொடி யேற்றத்துடன் துவங்கியது. சிஐ டியு மாவட்ட துணை தலைவர் ம. ராஜாங்கம் தொழிற்சங்க கொடி யேற்றினார். சங்க மாவட்டத் தலை வர் எம்.வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.செண்பகம் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். வரவேற்புக் குழு தலைவர் கே.மாரியப்பன் வரவேற்று பேசினார். சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலா ளர் ஆர்.மோகன் வேலை அறிக்கை யை சமர்ப்பித்து பேசினார். மாவட்ட பொருளாளர் எஸ்.வண்ணமுத்து வரவு செலவு அறிக்கையை சமர்ப் பித்து பேசினார். 2 ஆம் நாள் மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் உ.முத்துபாண்டியன், விதொச மாவட்ட செயலாளர் பாலுச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவராக எம்.வேல்முரு கன், மாவட்ட செயலாளராக ஆர்.மோகன், மாவட்ட பொருளாளராக எஸ்.பெருமாள் மற்றும் 9 துணைத் தலைவர்கள் மற்றும் 9 இணைச் செய லாளர்கள் உட்பட 45 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட் டது. 2 சிறப்பு அழைப்பாளர்களும் தேர்வு செய்யபட்டனர். மாநாட்டில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அனை வருக்கும் அமல்படுத்த வேண்டும், முறை சாரா தொழிலாளர்களுக்கான ஒய்வூதியத்தை மாதா மாதம் வழங்க வேண்டும், பீடி தொழிலா ளர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை வழங்க வேண்டும், 1000 பீடி சுற்ற ரூ.300 கூலி வழங்க வேண்டும், பென்ஷன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மருத்துவ காப்பீட்டு திட்டம், இ.எஸ்.ஐ வசதிகள் வேண்டும், பெட்ரோல் டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும், ஒய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச வேலை மற்றும் 8 மணி நேரவேலை வழங்க வேண்டும், நெல்லை மாவட்டத்தில் ஏரி, குளங் களை தூர் வார வேண்டும், கூடங் குளம் அணு மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள பணத்தை முழுமையாக வழங்க வேண்டும் .ஒப்பந்தகாரர்கள் தொழி லாளர்களை மிரட்டி ஏ.டி.எம் கார்டு களை பறிக்க கூடாது,திருநெல்வேலி -தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை நீதிமன்ற தடையை நீக்கி தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும், நகை மதிப்பீட்டாளர் களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் மற்றும் அவர் களுக்கு சமூக பாதுகாப்பு திட் டங்களை செயல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர். ரசல் நிறைவுரையாற்றினார். வர வேற்புக் குழு செயலாளர் லெனின் குமார் நன்றி கூறினார். மாநாட்டில் மூத்த தலைவர்கள் கவுரவிக்கப் பட்டனர்.