கள்ளக்குறிச்சி, டிச 29- நடப்பு 2021-2022 அரவை பருவத்திற்கு 9.5 பிழி திறனுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் ஐந்தாயிரம் விலை அறிவித்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் மாநில கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் டிசம்பர் 28 அன்று நடைபெற்ற இக்கோரிக்கை மாநாட்டிற்கு மாநில தலைவர் என்.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
கே.2 ஆலைத் தலைவர் ஆர்.குருநாதன் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார்.
கர்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.எல்.பரத்ராஜ், சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.ஏழுமலை, விவசாயிகள் சங்க மாவட்டச்செய லாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி, மாவட்டத் தலைவர் வி.ரகுராமன், வட்டசெயலாளர் ஜி.அருள்தாஸ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநில பொருளாளர் டி.பி.கோபிநாத், துணைத்தலைவர்கள் ஏ.எம்.பழனிச்சாமி, செ.நல்லாக் ்கவுண்டர், எம்.சக்தி வேல், எஸ்.பலராமன், ஆர்.குண்டுரெட்டியார், செயலாளர்கள் சி.பெருமாள், எஸ்.ஜோதிராமன், ஏ.கே.ராஜேந்திரன், எஸ். வேல்மாறன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், டி.காசிநாதன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநிலத் தலைவர் என்.பழனிச்்சாமி நிறைவுரை யாற்றினார். கே.2 ஆலை நிர்வாகி ஏ.வி.நாராயணபிள்ளை நன்றி கூறினார்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கடன் சுமைகளை மாநில அரசு ஏற்க வேண்டும், வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும், அலங்காநல்லூர் உள்ளிட்ட மூடி யுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்திட வேண்டும், கூட்டுறவு பொதுத்துறை ஆலைகளுக்கு தேவையான தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும், தனியார் ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.1500 கோடி கரும்பு பண பாக்கியை பெற்றுத் தரவேண்டும் எனவும், நவீன எத்தனால் பிளான்ட் அமைத்திடவும், ஆலைகளை புனரமைத்து மேம்படவும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு 5 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க வேண்டும், ஆலைகள் தங்களிடம் உள்ள சர்க்கரையை விற்பதற்கு உள்ள கோட்டா முறை யில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்குதர வேண்டும், கூட்டுறவு ஆலைகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.