tamilnadu

img

கால்நடை பராமரிப்பு உதவியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக!

மதுரை, பிப்.4- தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் 2-வது மாநில பொதுக்குழுக் கூட்டம் மதுரை அரசரடியில் பொதுச் செய லாளர் வே.ஜெயபால் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் கொடியேற்றி வைத்து தொடக்க உரை ஆற்றினார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.முருகேஸ்வரி வரவேற்றார். மாநிலப் பொருளாளர் முருகேசன் அஞ்சலி தீர்மானம்வாசித்தார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, மாநி லச் செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ் மற்றும் தோழமை சங்க நிர்வாகி கள் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மாநில இணைச் செயலாளர் ஆ.ராஜசேகரன் நன்றி கூறினார். கூட்டத்தில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் களின் காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட்டு வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் காலிப் பணி யிடங்கள் நிரப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது; தேர்தல் அறிவிப்புக்கு முன் காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து  செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அன்றாட பணிகளில் கால்நடை உதவி மருத்து வர், அலுவலர்களுக்கு உதவிகரமாக சிகிச்சை வார்டுகளில் முகாம்களிலும் பிண அறுவை ஆய்வின் போது உடன் பணியாற்றுவதால் நோய் தொற்று மற்றும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள தால், இதர பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கும் ஆபத்து ஈட்டு படி வழங்கிடவேண்டும். கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் பணியில் சேர்ந்தது போலவே, எவ்வித பதவி உயர்வும் இன்றி பணி ஓய்வு பெறுகின்றனர். இதனை தவிர்த்து ஆய்வாளர்களுக்கு 5 ஆண்டுகள் பணிக்கு பிறகு நிலை ஒன்று என பதவி உயர்வு இருப்பது போல் கால்நடை பராமரிப்பு உதவி யாளருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். கால்நடை பராமரிப்பு உதவியா ளர் என்பதை கால்நடை மருத்துவ உதவியாளர் என பெயர் மாற்றம் செய்ய ஆவணம் செய்ய வேண்டும். கால்நடை பராமரிப்பு உதவியாளர் களுக்கு சுழற்சி முறையில் வார விடு முறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.