சென்னை, அக். 11 - 3 விழுக்காடு அகவிலைப் படி உயர்வை வழங்கக் கோரி செவ்வாயன்று (அக்.11) தமிழகம் முழுவ தும் மின் வாரிய ஓய்வூதி யர்கள் மேலாடையின்றி போராட்டம் நடத்தினர். அரசு ஊழியர் மற்றும் பொதுத்துறை ஊழியர்க ளுக்கு ஆகஸ்ட் மாதம் 3 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்த உயர்வை ஓய்வூதியர்க ளுக்கு மின்வாரியம் வழங்க வில்லை. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் மேற் பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மேலாடை யின்றி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு பங்கேற்றனர். சென்னையில் மின் வாரிய தலைமை அலுவ லகம் முன்பு நல அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில், கொட்டும் மழையிலும் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “மின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொடுத்த மறுநாள் ஓய்வூதி யர்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது. இதை மீறி நிர்வாகம் செயல்படுகிறது” என்றார். கடந்த 6 மாதமாக நிறுத்தப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதியத்தை திரும்ப வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் கோரிக் கைகள் தொடர்பாக அதிகாரிகள் அலை கழிப்பதை கைவிட்டு, தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் தலையிட வேண்டும்
அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் பேசுகையில், “அரசு வழங்கும் சலுகைகளை வாரியம் தர மறுக்கிறது. சரண்டர் விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை பறித்துள்ளது. எனவே, வாரிய சுற்றறிக்கை-2ஐ ரத்து செய்ய வேண்டும். இதில் மின்துறை அமைச்சர் தலை யிட்டு தீர்வு காண வேண்டும்” என்றார். இந்தப்போராட்டத்தில் அமைப்பின் பொருளாளர் ஏ.பழனி, துணைப்பொதுச் செயலாளர் எம்.பாலசுப் பிரமணியம், மாநில செயலா ளர் தங்க.அன்பழகன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இந்த போராட் டத்தை தொடர்ந்து சங்க நிர்வாகிகள், வாரிய தலை வரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.