கொலம்பிய நாடாளுமன்றத்தின் இரு அவை களுக்குமான தேர்தல்கள் மார்ச் 13 அன்று நடைபெறவுள்ளது. மொத்தம் 279 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 3 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர் களாக இருக்கின்றனர். இதற்காக 1 லட்சத்து 12 ஆயி ரத்து 897 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள் ளன. தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் அவசிய மில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள் ளதால் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற் கரைப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வருகிறார்கள். சிட்னி நகரில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் ஏராளமான மக்கள் சிக்கி யுள்ளனர். சாலையில் நின்று போன கார் ஒன்றில் பய ணித்த இருவர் அதிலேயே உயிரிழந்தனர். பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வெள்ளம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினாலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியாக எதிர்க் கட்சி வேட்பாளர் யூன் சுக் இயோல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 95 விழுக்காடு வாக்குகள் எண் ணப்பட்ட நிலையில் ஆளுங்கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். 5 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தென் கொரியாவில் அசமத்துவம் மற்றும் தலைமுறை இடைவெளி ஆகிய இரண்டும் முக்கியப் பிரச்சனைக ளாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசப்பட்டன.