இந்த ஆண்டு 6 மாநிலங்களை விட மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்ட கல்விக்கடன் அதிகம் என்று சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "வடகிழக்கு மாநில ஆய்வுக்கூட்டம் முடிந்து.
சொல்ல வேண்டிய செய்தி. இந்த ஆண்டு மணிப்பூர், மிஸோரம், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, அருணாச்சல், ஆகிய ஆறு மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ள கல்விக்கடனை விட (94.23 கோடி), மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கல்விக்கடன் (116.17 கோடி) அதிகம்.
மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட அசாம் மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ள (89.43) கல்விக்கடனை விடவும் அ திகம். இதற்காக உழைத்திட்ட மதுரை மாவட்ட வங்கிகள், மாவட்ட நிர்வாகம், எமது அலுவலகத்தோழர்கள் அனைவருக்கும் மீண்டும் பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.