வன்முறையால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைப்பு
சென்னை, ஜூலை 11- சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக் கால பொதுச் செயலாளராக எடப் பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப் பட்டார். உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திங்க ளன்று (ஜூலை 11) காலை வானக ரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறை வேற்றப்படுவதற்கான 16 தீர்மானங் களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டன.
‘ஒற்றைத் தலைமை’
அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செய லாளர் ஜெயலலிதா என்றும், இனி அந்த பதவிக்கு யாரும் தேர்வு செய்யப் படமாட்டார்கள் என்றும் இருந்த அமைப்பு சட்டம் ரத்து செய்யப் பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி களுக்கு பதில் பொதுச்செயலாளர் என்று விதி திருத்தப்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப் படுபவர் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தனது பணிகளை நிறைவேற்று வார். நிர்வாக பொறுப்புகள் அனை த்தையும் பொதுச்செயலாளரே கவனிப்பார்.
பொதுச்செயலாளருக்கு அதிக அதிகாரம்
தலைமை செயற்குழுவை அமைக்கும் அதிகாரம் பொதுச்செய லாளருக்கு வழங்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தையும் இதுநாள் வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மேற்கொண்டு வந்தனர். இதில் தான் தற்போது திருத்தம் செய்யப் பட்டுள்ளது. பொதுச் செயலாளர் செயல்பட முடியாத நிலை ஏற்பட் டால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார்.
ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் பறிப்பு
இதற்கு முன்னர் இந்த ஒருங் கிணைப்பாளர்களால் நியமிக்கப் பட்ட பொறுப்பாளர்களே கட்சி பணி களை மேற்கொள்வார்கள் என்கிற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகளின் வரவு- செலவுகளை ஆராய்தல், அசை யும், அசையா சொத்துக்கள் பற்றி எழும் சட்ட பிரச்சனைகளில் நட வடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்படுகிறது. கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர் கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், ஒழுங்கு நட வடிக்கை தீர்மானங்கள் மீது இறுதி நடவடிக்கை எடுக்கும் அதி காரமும் பொதுச்செயலாளருக்கே அளிக்கப்படும் நிலையில் கட்சி பதவிகளில் திருத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் முன்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்தது. இப்படி அ.தி.மு.க. சட்ட விதி களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற சொற்றொ டர்கள் எங்கெல்லாம் வருகிறதோ, அந்த இடங்களில் எல்லாம் இனி பொதுச்செயலாளர் என்று மாற்றி அமைக்கப்படுகிறது. இவ்வாறு அ.தி.மு.க. பொதுக் குழுவில் சட்ட கட்சியின் விதிகளில் மாற்றம் செய்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முன் மொழிந்துபேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக வுக்கு ஒற்றைத்தலைமை காலத்தின் கட்டா யம் என்று கூறினார்.
ஒ.பி.எஸ் மீது தாக்கு
பொதுக்குழுவில் பேசிய பலர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரடியாகவும் மறை முகமாகவும் சாடினர். ஒற்றைத்தலைமை குறித்து ஓ.பன்னீர்செல்வத்துடன் சமாதா னப்பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் ஆனால் அவர் விட்டுக் கொடுக்க மறுத்து விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறி னார். பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்தே நீக்கும் தீர்மானத்தை ஏன் முதலில் கொண்டு வரவில்லை என்று கூறி மேடையிலேயே அக் கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி யிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண் முகம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடு பட்டார். தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பி னர்கள் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்த நீக்க வேண்டும் என்று கோஷங் களை எழுப்பினர். இதற்கான தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார் என்று முனுசாமி கூறிய பின்னரே அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
இடைக்கால பொதுச் செயலாளர்
பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு தீர்மானம் இதனைத் தொடர்ந்து அதிமுக பொரு ளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் முன் மொழிந்தார். மேலும், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதர வாளர்கள் வைத்தியலிங்கம்,ஜே.சி.டி பிரபா கரன், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பி னர் பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பொதுக்குழு உறுப்பி னர்கள் ஆதரவுடன் இந்த சிறப்புத் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி ஆகியோரை அதிமுக பொறுப்பிலிருந்து நீக்குவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதையடுத்து அவருக்கு பதிலாக புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனி வாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஏற்கனவே ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தபோது சீனிவாசன் இந்த பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பி டத்தக்கது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைப்பு
இந்நிலையில், அதிமுக தலைமை அலு வலகத்தில் திங்களன்று காலை நடந்த வன் முறை காரணமாக, கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்த னர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எடப்பாடி பேனர்கள் கிழிப்பு
முன்னதாக கட்சியின் தலைமை அலுவல கத்திற்கு காலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வந்த னர். அப்போது அங்கு குவிந்திருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற் களை கொண்டு தாக்கிக்கொண்டனர். இதில் பலர் காயமடைந்தனர். அதிமுக அலுவல கத்தில் இருந்த பேனரில் எடப்பாடி உரு வத்தை தொண்டர்கள் கிழித்தெறிந்தனர். அப்போது அதிமுக அலுவலக கதவு களை உடைத்துக்கொண்டு ஓ.பி.எஸ். ஆத ரவாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப் பேட்டை லாயிட்ஸ் சாலை போர்க்களம் போல் காட்சியளித்தது.