மதுரை, ஆக.21- மதுரையில் ஞாயிறன்று நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் பல லட்சக்கணக் கானோர் குவிவார்கள் என்று எதிர்பார்த்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. மாலை நான்கு மணிக்குத் தான் அதிகாரப்பூர்வ “எழுச்சி மாநாடு” தொடங்கியது. இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. காலை ஒன்பது மணி முதல் நான்கு மணி வரை காத்திருந்த தொண்டர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதிமுக பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை 6.07 மணிக்கு பேச்சைத் தொடங்கி 7.07 மணிக்கு முடித் தார். அவர் தமது பேச்சில், எங்கும் பாஜக என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. பாஜக ஆட்சியைப் பற்றியோ, அதிமுக-வை கடுமையாக விமர்சிக்கும் அண்ணாமலை குறித்தோ வாய்திறக்கவில்லை. “கூட்டணிக்கட்சிகள்” என்ற வார்த்தையையும் பயன்படுத்த வில்லை. தவறியும் மோடி, அமித்ஷா பெயரை உச்சரிக்க வில்லை. மக்களவைத் தேர்த லில் அதிமுக போட்டியிடுவது குறித்தும் கூடப் பேசவில்லை. “மதுரை எய்ம்ஸ்” குறித்து எதுவும் பேசவில்லை. கச்சத் தீவு குறித்து மட்டும் சில நிமி டங்கள் பேசிய எடப்பாடி, கச்சத் தீவை மீட்பதற்கு சட்டப் போராட்டம் நடத்தியவர் ஜெய லலிதா என்றார். தினம் தோறும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்தோ, இப்பிரச்சனையில் ஒன்றிய அரசின் நடவடிக்கை குறித்து எதுவும் பேசவில்லை. அதிமுகவின் பழைய காலத்துக் கதைகளை மட்டுமே கூறினார். அதிமுக ஆட்சியில் தமிழகம் ஏற்றம் பெற்றது; அனைத்துத் துறைகளிலும் முதல் நிலையில் இருந்தது; பல விருதுகளைப் பெற்றுள்ளது; சாமானியரும் நன்மை அடைந்த னர் என்றார். வழக்கம் போல, பேச்சு முழு வதும் திமுகவையும் அதன் அர சையும் கடுமையாக விமர்சித் தார். “அதிமுக-வை யாராலும் அழிக்க முடியாது; உங்கள் (திமுக) கட்சியை வேண்டுமா னால் காப்பாற்றிக்கொள்ளுங் கள்” நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக தான்; என்னிடம் “ரிக்கார்டு இருக்கிறது... ரிக்கார்டு இருக்கிறது” என்று கூறினார்.
குடியுரிமைச் சட்ட திருத்தம் குறித்தோ, 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்தோ, மணிப்பூரில் பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்தோ அவர் வாய் திறக்கவில்லை. ஒற்றை வரியில், “சிறுபான்மை மக் களைப் பாதுகாக்கும் கட்சி அதிமுக தான்” என்றார். டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் போது ஏற்பட்ட பாதிப்புகளை புயலின் வேகத்தை விட வேகமாக மக்க ளுக்கு உதவியது அதிமுக தான் என்றார். அரசு நிவாரணம் வழங்கியது போக காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தும் நிவார ணம் பெற்றுத் தந்ததாகக் கூறி னார். காப்பீட்டு நிறுவனம் எவ்வ ளவு வழங்கியது என்பது குறித்தோ, காப்பீட்டு நிறுவனத் தின் தொகையை எவ்வளவு விவசாயிகள் பெற்றனர் என்பது குறித்தோ கூறவில்லை. அதிமுக தொண்டர்கள் கார், பஸ், வேன்களை பிடித்து மாநாட்டிற்கு வந்திருந்தனர். அவர்களிடம் வழக்கமான ‘திமுக எதிர்ப்பு’ பேச்சைத் தவிர, நாடாளுமன்றத் தேர்தல் குறித்தோ, தேர்தலில் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டி யிடும் என்பது குறித்தோ, பாஜக-வை அனுசரித்துச் செல்வதா என்பது குறித்தோ அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி எதையும் பேச வில்லை. இதனால் ஆர்வத்து டன் வந்திருந்த அதிமுக தொண் டர்கள் உற்சாகமின்றி சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மாநாட்டில் பேசிய ஒருவர் கூட “பாஜக” எனும் மூன்றெ ழுத்தை உச்சரிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி மட்டும் “பாம்புக்கு பால்வார்க்க வும் தெரியும்; அது படமெடுக்கும் போது அதன் தலையில் அடிக்க வும் எங்களுக்குத்தெரியும்” என்றார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், அண்ணன் எடப்பாடியாருக்கு அனைவரும் “ஒ” போடுங்கள் என்றார். அனைவரும் “ஒ” போட்டனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவாதன் பேசுகையில், “2024-தேர்தலில் எடப்பாடி வகுத்துக்கொடுக்கும் தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் தேர்தல் பணியாற்றுவோம். 2026-இல் எடப்பாடியை முதல்வர் அரியாசனத்தில் அமரச் செய்வோம்” என்றார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகை யில், “ஏம்பா பேசனுமா... வேணாம்மா... நம்மை வாழ வைக்கும் தெய்வம் எடப்பாடி. எல்லோரும் எடப்பாடியை பேசச் சொல்லுங்கள் என்கிறீர் கள்; அது தான் அதிமுக. அரசியல் ஆண்மை இருந்தால் மதுரையில் நாங்கள் நடத்திய மாநாடு போல் நீங்கள் நடத்தி விட்டால் அரசியலை விட்டே வெளியேறுகிறேன்” என்று சவால் விடுத்தார்.
‘புரட்சித் தமிழரா’னார் எடப்பாடி!
சர்வ சமய மக்கள் பேரவை சார்பில் எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டது. இனிமேல் எடப்பாடி பழனி சாமி புரட்சித் தமிழர் என அழை க்கப்படுவார் என மேடையில் அறிவித்தனர். ‘23 ஆம் புலிகேசி’ படக்காட்சி மனக் கண்ணில் விரிந்தது.
தேசியத் தலைவரும் எடப்பாடியே!
முன்னாள் அமைச்சர் முனுசாமி பேசுகையில், “அண்ணா, எம்ஜி.ஆர். ஜெய லலிதா வரிசையில் எடப்பாடி பழ னிசாமியும் தேசியத் தலைவ ராகிவிட்டார். தேசியத் தலைவர் அந்தஸ்து இந்த மாநாட்டின் மூலம் அவருக்குக் கிடைத் துள்ளது” என்று புகழ்ந்து தள்ளினார்.
பாஜகவிடம் பம்மிய அதிமுக
இந்த மாநாட்டில், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ஒன்றிய அரசையும், அந்த மாநில அரசையும் வலி யுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தீர்மான வரியில் கூட மாநில பாஜக அரசு என்றோ, ஒன்றிய பாஜக அரசு என்றோ குறிப்பிடப்படவில்லை. காலையில் மாநாட்டு அரங் கில் திரண்டிருந்த கூட்டத்தை பல காட்சி ஊடகங்கள் காட்டின. அதே காட்சி ஊடகங்கள் மாலையில் எடப்பாடி பழனி சாமி பேசத் தொடங்கி முடிக்கும் வரை அவர் பேசிய அரங்கத் திற்கு நிகராக அருகில் அமைக்க ப்பட்டிருந்த மற்றொரு பந்தலில் அகண்ட பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. ‘இரண்டு கோடி’ தொண்டர் களைக் கொண்ட கட்சி அதிமுக; நாங்கள் தான், பெரிய கட்சி எனக் கூறிச் சென்ற எடப்பாடிக்கு அங்கு திரண்டிருந்த ‘கூட்ட த்தையும்’ காண்பித்திருக்க வேண்டும்.
- ச.நல்லேந்திரன்
அதிமுக மாநாட்டிற்காக சமைக்கப்பட்ட உணவு மலைபோல் கொட்டி வீணடிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி
அதிமுக மாநாட்டிற்காக உணவு சமைக்க தனியாக ஆட்களை நியமனம் செய்து சமையல் பணி நடந்தது. இதில் காலையில் இருந்தே அதிமுக தொண்டர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், பலர் உணவு சரி இல்லை என்று உணவை சாப்பிடாமல் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். மாநாடு முடிந்த பின்பு ஆயிரக்கணக்கானோர் சாப்பிடக்கூடிய உணவினையும் அங்கேயே கீழே கொட்டி வீணடித்தனர். 50 பேர், 100 பேர் சாப்பிடக்கூடிய உணவைக் கூட வீணாக்கக் கூடாது என்று சிலர் ஆசிரமங்களுக்கு கொடுத்து வரும் நிலையில், இப்படி ஆயிரக்கணக்கானோர் சாப்பிடும் உணவை அதிமுகவினர் கீழே கொட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறோம் என்ற பெயரில் இப்படி உணவினை சமைத்து வீணடித்தது மக்களை முகம் சுளிக்க வைத்தது. இதேபோல் அங்கு சென்ற ஊடகத்தினருக்கும் போதிய குடிநீர், இருக்கை வசதி கூட செய்து கொடுக்கவில்லை என்று பல்வேறு ஊடகத்தினரும் புலம்பிக் கொண்டிருந்தனர்.