காபூல், ஜூன் 22- ஆப்கானிஸ்தான் பக்திகா மாகா ணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக் கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது. 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள னர். பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயம டைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப் படுகின்றன. அரசின் பக்தார் செய்தி முகமை வெளியிட்ட செய்தியில் 1000 பேர் இறந்ததாகவும், 1500 பேர் காயம டைந்ததாகவும், பலி எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி அதி காலை 1:30 மணிக்கு இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 7,000 பேருக்கும் மேலானவர்கள் அங்கு நிலநடுக்கம் காரணமாக இறந்துள்ள னர் என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலு வலகத்தின் தரவுகள் கூறுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 560 பேர் நில நடுக்கத்தால் இறந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது. “துரதிஷ்டவசமாக கடந்த இரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட் டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்க ணக்கான ஆப்கன் மக்கள் உயிரி ழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ள னர். இந்த நிலநடுக்கம் பல வீடுகளை யும் அழித்துள்ளது.” என அரசு செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்கு, உதவி முகமைகள் தங்களின் குழுக்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கி றேன்” என்றும் அவர் தெரிவித்தார். காபூலில் இருந்து 182 கி.மீ. தொலை விலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத்தில் இருந்து 334 கி.மீ. தொலை விலும், இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு -காஷ்மீரின் ரஜௌரியில் இருந்து 445 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.1 அளவில் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரி வித்துள்ளது. அத்துடன் இந்திய நேரப் படி ஜுன் 22-ம் தேதி அதிகாலை 2.24 மணிக்குப் பதிவான இந்த நில நடுக்கத்தின் மையம் பாகிஸ்தானில் இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகிறது அந்த நிலநடுக்கவியல் மையம்.