மேகாலயா, அந்தமானில் நிலநடுக்கம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் புதன் ்கிழமை அன்று நள்ளிரவு 11:43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த நில நடுக்கம் அண்டை மாநிலமான அசாமி லும் உணரப்பட்டதாக வடகிழக்கு ஊட கங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து வியாழக்கிழமை அன்று காலை அந்தமான் கடல் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. காலை 8:49 மணிய ளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரி வித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங் கள் எதுவும் உடனடியாக வெளியிடப் படவில்லை.
“கும்பமேளா நீரை குடிப்பாரா ஆதித்யநாத்?”
பிப்ரவரி 16ஆம் தேதி கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்க மத்தில் பாயும் ஆறுகளின் நீர் குளிக்கக் கூட உகந்தது அல்ல என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டது. உடனே உத்தரப்பிரதேச பாஜக முதலமைச்சர் ஆதித்யநாத், “திரிவேணி சங்கமத்தில் உள்ள நதி குளிப்பதற்கு மட்டுமல்ல, குடிப்பதற்கு ஏற்றது” எனக் கூறினார். இந்நிலையில்,உத்தரப்பிரதேச முதல்வரின் இந்தப் பேச்சுக்குப் பதில ளித்திருக்கும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “கும்பமேளாவில் மக்கள் நீராடும் அந்த நதியிலிருந்து நீர் எடுத்து, மக்க ளுக்கு மத்தியில் குடிக்க வேண்டுமென ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்ச ரவைக்குச் சவால் விடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.